RECENT NEWS

எம்பி சசிகாந்த் செந்திலின் கார் முன்னால் விழுந்து சாலையில் உருண்ட பெண்

எம்பி சசிகாந்த் செந்திலின் கார் முன்னால் விழுந்து சாலையில் உருண்ட பெண்

Jul 18, 2025

எம்பி சசிகாந்த் செந்திலின் கார் முன்னால் விழுந்து சாலையில் உருண்ட பெண்

எம்பி சசிகாந்த் செந்திலின் கார் முன்னால் விழுந்து சாலையில் உருண்ட பெண்

Jul 18, 2025

முகப்பு

food டெலிவரி பாயை வீட்டுக்குள் விடலாமா ? வில்லங்கன் சிக்கியது எப்படி ?

Jun 21, 2025 03:56 PM

167

food டெலிவரி பாயை வீட்டுக்குள் விடலாமா ? வில்லங்கன் சிக்கியது எப்படி ?

பாவப்பட்ட ஐ.டி பெண் ஊழியர் வீடு புகுந்த zepto வில்லன்..!

எப்பதான் இந்த ஜென்மங்கல்லாம் திருந்த போவுதோ.. என்று பெண்களை எரிச்சலைய வைத்திருக்கின்றது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள்..!

அந்தவகையில் ஆன் லைன் மூலம் வாங்கிய பொருட்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய சென்ற சேட்டைக்காரன் ஒருவனால் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த வில்லங்கம் விபரீதமானது.. இரண்டாவது முறையாக லட்டு கிடைக்கும் என்ற ஆசையில் சென்றவன், போலீசாரால் லட்டாக தட்டி தூக்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் 27 வயது இளம்பெண் ஒருவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 13 ஆம் தேதி மதியம், ஆன்லைன் மூலம் zepto உணவு பொருட்கள் டெலிவரி நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

டெலிவரி செய்ய வந்த நபர், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கிறார் என்பதை தெரிந்துக் கொண்டு, பேச்சுக் கொடுத்துள்ளார். மேலும், தனது செல்போனில் சார்ஜ் இல்லை எனவும், செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகப் போகிறது, அடுத்த டெலிவரிக்கான விவரம் இந்த செல்போனில் தான் உள்ளது, சார்ஜ் போட்டுக் கொள்கிறேன் ப்ளீஸ் மேடம் என கெஞ்சி கேட்டுள்ளார்.

இளம்பெண்ணும் வேறு வழியில்லாமல் டெலிவர் பாய் கூறியதை நம்பி, சார்ஜ் போட அனுமதித்தாக கூறப்படுகிறது. பின்னர், அந்த இளம்பெண் தனது வீட்டின் சமையல் அறைக்கு சென்றபோது, பின் தொடந்து வந்த டெலிவரி பாய், அப்பெண்ணிடம் சமையலுக்கு உதவி செய்யட்டுமா என கேட்டுள்ளார்.

இதனால், சந்தேகப்பட்ட அப்பெண், அவரின் செல்போனை பார்த்தபோது, போனில் முழுவதும் சார்ஜ் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். டெலிவரி பாயின் உள்நோக்கத்தை புரிந்துக் கொண்டு, அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி கூச்சலிட்டுள்ளார்.

ஆனால், அந்த நபர் அப்பெண்ணிடம் தவறாக பேசியும், அப்பெண்ணின் உடலை பற்றி ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் தவறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வருவது தெரிந்து, அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, உடனடியாக ஜெப்டோ டெலிவரி நிர்வாகத்திற்கு, வாடிக்கையாளர் சேவை எண்ணில் தொடர்பு கொண்டும், இ- மெயில் மூலமும் விவரத்தை கூறி அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இளம்பெண் புகார் அளித்துள்ளார். நிச்சயம் அந்த டெலிவரி பாய் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெப்டோ நிறுவனமும் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஒரு மாதம் கழித்து ஜெப்டோ நிறுவனத்தில் வழக்கமாக உணவு பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் கொடுக்க வந்த நபர், ஏற்கனவே அந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே நபர்தான் என்பதை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

தான் அளித்த புகாரை ஏற்று அந்த ஊழியரை வேலையை விட்டு அனுப்பியிருப்பார்கள் என நம்பியிருந்த நிலையில், அதே நபரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து அந்த நபரை ஓட விடாமல் மடக்கியதாக கூறப்படுகிறது.

ஜெப்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு மீண்டும் அழைத்து, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறும் நபர் குறித்து புகார் அளித்துள்ளேன். அப்படியிருக்க, இதுபோன்ற ஆபத்தான நபர்களை மீண்டும் எப்படி டெலிவரிக்கு அனுப்பினீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தொடர்பு கொண்டதும் சிறிது நேரத்தில் மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த உணவு டெலிவரி பாயை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் கோபிநாத் என்பதும் 28 வயது இளைஞரான அவர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மென் பொறியாளரிடம் புகாரைப் பெற்று, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்து, ஜெப்டோ நிறுவனம் ஃபுட் டெலிவரி பாய் கோபிநாத்தை கைது செய்தனர்.

உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யக்கூடிய நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தும் ஊழியர்கள் குற்றப் பின்னணி உடையவர்களா? என்பதை சரிபார்த்து பணியமரத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று, வாடிக்கையாளர்ளிடம் எந்தவிதமான குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் அளிக்கும் கருத்துக்களையும், புகார்களையும் கவனத்தில் கொண்டு பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், உணவு டெலிவரி செய்யும்போது அலட்சியமாக செயல்பட்டால், அந்த நிறுவனத்துக்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அதுவே, வீட்டிற்குள் புகுந்து பாலியல் ரீதியாக அத்துமீறினால், சட்டரீதியான நடவடிக்கைக்கு காவல்துறைக்குத்தான் தகவல் அளிக்கவேண்டும்.

சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும்போது அப்போதே 100 க்கு ஃபோன் செய்து தகவல் அளிக்கவேண்டும். மேலும், பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாகப் பெற `காவல் உதவி’ செயலியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என கூறிய போலீஸார், இந்த விவகாரத்தில் ஜெப்டோ நிறுவனத்தின் அலட்சியம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

"குற்றம் செய்தவனை விட குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவனே பெரிய குற்றவாளி" அப்படியிருக்க, சீக்கிரம் விசாரித்து நடவடிக்கை எடுங்க ஆஃபிசர்ஸ் என்கிறார்கள், பொதுமக்கள். அதே நேரத்தில் சில ஆபாச சினிமாக்களில் காட்டப்படுவது போல தனியாக இருக்கும் பெண்கள் என்றாலே எப்போதும் மோகத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு எல்லை மீறலாம் என்று சின்னப்புத்தியுடன் வலம் வரும் வக்கிரர்களுக்கு மூளையில் மட்டுமல்ல உடலில் உறைக்கும் வகையில் கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

விரோதத்தில் செய்தாலும்... விருப்பத்தில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆசை ஆசையாய் காத்திருந்து வீட்டில் அடம்பிடித்த இளைஞர்..! ஒன்றரை மாதத்தில் சோகம்..! உயிர் கொடுத்தவருக்கு உயிர் இல்லை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies