RECENT NEWS

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

Jul 17, 2025

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

Jul 17, 2025

BIG STORIES

"கட்டிலுக்கு கீழ ஒரு கை தெரியுது பாட்டி" திகில் கிளப்பிய சிறுமி பெண்ணுக்கு நடந்தது என்ன?

Jun 17, 2025 01:40 PM

230

"கட்டிலுக்கு கீழ ஒரு கை தெரியுது பாட்டி" திகில் கிளப்பிய சிறுமி 
பெண்ணுக்கு நடந்தது  என்ன?

சாக்கு மூட்டையில் கிடந்த பெண்ணின் உடல்.. ஊதுபத்தி ஏற்றி வைத்தும் சிக்கிய திகில் பின்னணி

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த 48 வயதான பிரியம்வதா என்ற பெண் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவரின் இரு மகள்களும் திருமணம் ஆனதால் ஒருவர் வெளிநாட்டிலும் மற்றொருவர் வெளியூரிலும் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி முதல் தனது தாயாரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், முந்திரி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று திரும்பியவர் அதன் பின் காணவில்லை என பிரியம்வதாவின் மகள் வெள்ளறடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த கூலித் தொழிலாளியான வினோத் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது மகளான சிறுமி ஒருவர், பக்கத்து வீட்டில் உள்ள தனது பாட்டியான சரஸ்வதி வீட்டிற்கு சென்று, "பாட்டி எங்க வீட்டுக் கட்டிலுக்கு அடியில ஒரு கை தெரிஞ்சுச்சு, அதுவும் ரத்தமா இருந்துச்சு" என தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, இது பற்றி தனது மருமகனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ஜெபக் கூட்டத்திற்கு சென்ற சரஸ்வதி அங்கு பாதிரியாரிடம் பேத்தி கூறியதை தெரிவித்துள்ளார். பின்னர் இந்த தகவல் போலீசாருக்கு சென்ற நிலையில் வினோத்திடம் விசாரணை நடத்த வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வீடு முழுவதும் டெட்டால் ஊற்றி கழுவியிருந்ததை கண்ட போலீசாருக்கு வினோத் மீது இன்னும் சந்தேகம் அதிகரித்தது. இதனால் போலீசார் வினோத்தை பிடித்து விசாரித்தபோது, பிரியம்வதாவை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வினோத்திடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியே வந்தன.

வினோத்தின் மனைவி கத்தார் நாட்டில் செவிலியராக வேலை பார்த்து வரும் நிலையில், மகளோடு வசித்து வந்த வினோத்திற்கும், தனியாக வசித்து வந்த பிரியம்வதாவிற்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் இருவரும் அந்த உறவில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

இருவரும் நெருங்கி பழகிய நேரத்தில் வினோத்திற்கு, பிரியம்வதா அதிக பணம் கொடுத்ததாகவும், பின்னர் அந்த பணம் குறித்து ஏற்கனவே 3 முறை கேட்டதாகவும் வினோத் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பிரியம்வதா பணத்தை கேட்டு தன்னை தொல்லை செய்ததாகவும், அப்போது ஆத்திரத்தில் தாக்கியபோது அவர் மயங்கியதாகவும் வினோத் தெரிவித்துள்ளார்.

மயங்கிய பின், பிரியம்வதாவை தனது வீட்டிற்கு தூக்கி சென்ற வினோத் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். உடலை சாக்குப் பையில் கட்டி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்துள்ளார். உடலில் இருந்து தூர்நாற்றம் வீசும் என்பதால் அந்த அறையில் இரண்டு நாட்களாக சந்தன ஊதுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு வழக்கம் போல வினோத் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்படி இருந்தும் அந்த அறையில் இருந்து தூர்நாற்றம் வீசியதால் வினோத்தின் மகள் கட்டிலுக்கு அடியில் சென்று பார்த்தபோது சாக்குப்பையில் கை தெரிந்ததை பார்த்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது எதுவும் தெரியாத வினோத், தனது சகோதரர் சந்தோஷிடம் நடந்ததை தெரிவித்து, உடலை அடக்கம் செய்ய உதவியை நாடியுள்ளார். இதனால் வினோத்தின் வீட்டிற்கு பின்பு குழி தோண்டி வினோத்தும், சந்தோஷும் புதைத்துள்ளனர். பின்னர் இருவரும் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே போலீசார் வீட்டிற்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து புதைக்கப்பட்ட பிரியம்வதாவின் உடலை மீட்ட போலீசார், உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட வினோத்தையும், உடலை அப்புறப்படுத்த உடந்தையாக இருந்த சகோதரர் சந்தோஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பணம் கேட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக வினோத் கூறிய போதும், போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளதால் வேறு காரணம் எதுவும் உள்ளதா என போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வினோத்திற்கு போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அம்மனைக் கொண்டாடும் ஆடி மாதம்.. எட்டுத் திக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்.. மனதை மயக்கும் மாயக்குரலரசி !
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies