முகப்பு
சீட்டிங் செய்தாரா அஸ்வின்..? TNPL-ல் நடந்தது என்ன..? சிக்கலில் தவிப்பது யார்?
Jun 17, 2025 02:08 PM
123
சிக்கலில் சிக்கியது அஸ்வின் இல்லையாம்..! TNPL போட்டியில் அன்று நடந்தது என்ன?
டிஎன்பிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி சேலத்தில் நடந்த இரவு போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின.
மழையால் சற்று தாமதாக தொடங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 12.3 ஓவரிலேயே அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டனான அஸ்வின் மீது மதுரை பேந்தர்ஸ் அணி டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்தது. அந்த புகாரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை துடைக்கும் துண்டுகளில், இரசாயனத்தை பயன்படுத்தி பந்தை கடினப்படுத்தியதாகவும், பந்து பேட்டில் படும்போதெல்லாம் உலோகத்தின் ஒலியை போன்று சத்தம் எழுந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து பேசிய டிஎன்பிஎல் சி.இ.ஓ பிரசன்ன கண்ணன், தற்போது மழைக்காலம் என்பதாலும், இரவில் பனிப்பொழிவு இருப்பதாலும் பந்து வழுக்காமல் இருக்க துண்டுகளை பயன்படுத்தலாம். அதுவும் டிஎன்பிஎல் வழங்கும் துண்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே அவர்கள் பந்தை உலர்த்த வேண்டும், பந்துகளை நடுவர்களின் முன்னிலையில்தான் வீரர்கள் துடைக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை பந்து சிக்ஸர் அடிக்கப்பட்டு ஆடியன்சிடம் சென்று வரும்போது அல்லது ஓவர் பிரேக் ஆன உடனேயோ, நடுவர்கள் தொடர்ந்து பந்தைச் சரிபார்ப்பார்கள். அந்த போட்டியின் போது பந்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதுரை பேந்தர்ஸ் அணி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருப்பதாகக் கண்டறிந்தால், நாங்கள் ஒரு தனிக் குழுவை அமைப்போம், அதற்கு மதுரை பேந்தர்ஸ் அணி ஆதாரத்தை தர வேண்டும், இல்லையென்றால் தனி நபர் மீது பொய்யான குற்றச்சாட்டை ஏற்க முடியாது, ஆதாரத்தை தராத பட்சத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி நஷ்ட ஈடு போன்ற உரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரம் எதுவுமில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்த மதுரை பேந்தர்ஸ் அணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu