RECENT NEWS

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலியை குத்திக் கொன்ற காதலன்

BIG STORIES

மீண்டும் "மேடே" "மேடே" நடுவானில் பதறிய பயணிகள்!திணறிய சென்னை விமானம் திக் திக் நொடிகள்!!!

Jun 22, 2025 05:44 AM

237

மீண்டும் "மேடே" "மேடே" நடுவானில் பதறிய பயணிகள்!திணறிய சென்னை விமானம் திக் திக் நொடிகள்!!!

மீண்டும் "மேடே" "மேடே" நடுவானில் பதறிய பயணிகள்!திணறிய சென்னை விமானம் திக் திக் நொடிகள்!!!

நடுவானில் மீண்டும் "மேடே" "மேடே", அவசர அழைப்பு விடுத்த விமானிகள்.. விமான பயணிகளை கலங்கடிக்க செய்த மற்றொரு சம்பவம்.. சென்னை நோக்கி வந்த விமானத்தில் திக் திக் நொடிகள்... என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்...

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு, கடந்த வியாழக்கிழமை இரவு, 168 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. அப்போது சென்னையை நெருங்கி கொண்டிருந்த போது, விமானத்தில் போதுமான எரிபொருள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனே விமானிகள் ”மே டே” ”மே டே” என எமர்ஜென்சி அழைப்பை விடுத்துள்ளனர். திடீரென நடுவானில் ”மே டே” அறிவிப்பை கேட்ட பயணிகள் அனைவரும் அச்சத்துடன், விமான இருக்கையின் விளிம்பிற்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த விமானம் இரவு 7.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனால் இரண்டாவது முறையாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க விமான அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால், இரண்டாவது முயற்சி மேற்கொள்ளாமல், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டு, விமானத்தை உடனே பெங்களூருவுக்கு இயக்கினர்.

இதற்கிடையே அவசர அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் உடனடியாக மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இதையடுத்து இரவு 8.20 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் உரிய நேரத்தில் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், கவனக்குறைவாக செயல்பட்ட அந்த 2 விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இண்டிகோ நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

சமீபத்தில், குஜராத் மாநிலம் அகமாதாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட மேல் நோக்கி பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானத்தில் விமானிகள் “மே டே” “மே டே” என அவசர அழைப்பை விடுத்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே, விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த ஒரு பயணியை தவிர, மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

270 பேரை பலிக்கொண்ட இந்த விமான விபத்தானது, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, கடந்த சில நாட்களாக அனைத்து விமானங்களில் தீவிர பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படுவருகிறது. இதனால் சிறிய தொழில் நுட்ப கோளாறு அறிகுறி இருந்தால் கூட, விமானம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமானம் மே டே அழைப்பு விடுத்து தரையிறங்கியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் பதட்டத்தில் கீழே குதித்து இருந்தால் என்ன ஆகும்? எனவும் பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அன்று கெத்து காட்டியவர் இன்று வெத்தான சோகம்... ரெயிலு.. ஜெயிலு.. பெயிலு..! கொள்ளை வழக்கில் கைதான பின்னணி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies