RECENT NEWS

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

BIG STORIES

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

Jun 22, 2025 01:58 AM

311

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

சென்னை அசோக் நகரில் காதல் மனைவியை பிரிந்து வாழும் இளைஞர், தனது குழந்தையை பார்க்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் மனைவியின் சகோதரர்களால் வெட்டிக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக்நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு எல்ஐஜி பிளாட்டில் வசித்து வந்தவர் கலையரசன்., blinkitஎன்ற தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்த கலையரசன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழரசி என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தார். மூன்று வயதில் மகன் உள்ள நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்

கடந்த 14ம் தேதி இரவு கலையரசன் வேலை முடிந்து, வீட்டின் அருகே வசித்து வந்த மனைவி தமிழரசி வீட்டிற்கு சென்று, தனது மூன்று வயது மகனுக்கு நொறுக்கு தீனி வாங்கி கொடுத்து மகனை கொஞ்சியதாக கூறப்படுகின்றது. அங்கிருந்த கலையரசனின் மைத்துனர் சக்திவேல் அவரை பார்த்து , ஏண்டா குழந்தைக்கு சாப்பிட வாங்கி கொடுக்கின்றாய்.,என்று தகாத வார்த்தையில் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனால் தனது வீட்டுக்கு திரும்பிய கலையரசன், நண்பருடன் அருகில் உள்ள பிரியாணி கடைக்கு சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்து மர்மகும்பல் ஒன்று கலையரசனை சரமாரியாக வெட்டிவிட்டு பைக்கில் தப்பிச்சென்றது. அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி 21ந்தேதி கலையரசன் உயிரிழந்தார். மகனுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை பார்த்து கதறி அழுத தாய் கல்யாணி , மனைவி தமிழரசி ஏவியதால் , அவரது சகோதர்கள் தனது மகனை கொலை செய்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்

அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலையரசனின் மைத்துனர் சக்திவேல், அவரது தம்பி சஞ்சய் மற்றும் கூட்டாளி சுனில் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் கலையரசன் மனைவிக்கும் பிரபல ரவுடியின் கூட்டாளி சரவணன் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக சந்தேகித்த கலையரசன் தனது மனைவியிடம் இது குறித்து கேட்டதால் அவர் பிரிந்து சென்றதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக கடந்தஆண்டு கலையரசனும், மனைவியின் சகோதரர்களும் மோதிக் கொண்டதாக கூறப்படுகின்றது. இருதரப்பினருக்கும் இடையே இருந்து வந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாக இந்த கொடூர கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது நண்பர் பிரதேஷ் கூறும் போது, கலையரசனை அவரது மனைவி தமிழரசியின் சகோதரர்கள் சக்திவேல் , சஞ்சய் மற்றும் நண்பர் சுனில் குமார் உள்ளிட்டோர் கொலை செய்ததாகவும், கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சில நிமிடங்களிலேயே தமிழரசியும், அவரது ஆண் நண்பரான ரவுடி சரவணனும் வந்து நோட்டம் விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies