RECENT NEWS

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் விழுந்து தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் விழுந்து தற்கொலை

Jul 13, 2025

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் விழுந்து தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் விழுந்து தற்கொலை

Jul 13, 2025

BIG STORIES

கடன் பட்டார் நெஞ்சம்.. தறிக்கூடத்துக்கு சீல் குடும்பத்தினர் மிரட்டல்..! ரூ.58 லட்சம் கடன் - வங்கி நடவடிக்கை

Jun 18, 2025 01:19 AM

171

கடன் பட்டார் நெஞ்சம்.. தறிக்கூடத்துக்கு சீல் குடும்பத்தினர் மிரட்டல்..! ரூ.58 லட்சம் கடன் - வங்கி நடவடிக்கை

கடன் பட்டார் நெஞ்சம்.. தறிக்கூடத்துக்கு சீல் குடும்பத்தினர் மிரட்டல்..! ரூ.58 லட்சம் கடன் - வங்கி நடவடிக்கை

பல்லடம் அருகே கடனை திருப்பி செலுத்தாததால், வீடு மற்றும் தறி குடோனுக்கு சீல் வைக்க வந்த வங்கி அதிகாரிகளையும் போலீசாரையும் தடுத்து ரகளை செய்த தறி உரிமையாளர் குடும்பத்தினர் ட்ரான்ஸ்பார்மர் மற்றும் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

வங்கியில் பெற்ற கடனை திரும்பி செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவு பெற்று வீடு மற்றும் தறிக்கூடத்தை சீல் வைக்க வந்த வங்கி ஊழியர்களையும், போலீசாரையும் தடுத்து குடும்பத்தினர் போராடிய காட்சிகள் தான் இவை..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தறி குடோன் அமைப்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு தனது வீடு மற்றும் நில பத்திரத்தை அடமானம் வைத்து கோவையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 97 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 56 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்திய நிலையில் , மீதமுள்ள கடனை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். வட்டியுடன் சேர்த்து 58 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்த வங்கியில் இருந்து பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜகோபால் தரப்பில் பணம் செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின் பெயரில் நிலத்தில் உள்ள வீடு மற்றும் தறி குடோன் ஆகியவற்றை சீல் வைப்பதற்கு காவல்துறை பாதுகாப்போடு வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜகோபாலின் வீட்டிற்கு சென்றனர்.

முறையான நோட்டீஸ் கொடுக்கவில்லை எனவும், வங்கி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க முடியாது எனவும் கூறி ராஜகோபாலின் குடும்பத்தார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நோட்டீஸ் மூலமாகவும், நேரடியாவும் பலமுறை எச்சரித்தும் கடனை திருப்பிச்செலுத்தாமல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி கால அவகாசம் பெற்று வந்ததால் தற்போது சீல் வைக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் உதவியோடு வங்கி அதிகாரிகள் தறிகுடோன் மற்றும் ராஜகோபாலின் வீடுகளுக்கு அடுத்தடுத்து சீல் வைத்த நிலையில் , வங்கி அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து ராஜகோபால் மற்றும் அவரது தங்கை ஆகிய இருவரும் திடீர் மிரட்டல் போராட்டத்தில் குதித்தனர்.

ராஜகோபால் அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உயிரை விடபோவதாக கூறிய நிலையில், உயர்மின் கோபுரத்தில் ஏறிய அவரது சகோதரியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் எப்படி சீல் வைக்கலாம் ? என்று ராஜகோபால் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய நிலையில், நீதிமன்ற தடை ஆணை இருந்தால் மட்டுமே ஜப்தி நடவடிக்கையை நிறுத்த இயலும் என்று வங்கு ஊழியர்களும், காவல்துறையினரும் தெரிவித்தனர்

அதனால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குடும்பமா? நாடா? வம்பிழுக்கிறாரா கம்பீர் ? கோலிக்கு  ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies