BIG STORIES
கார் நிறுவன பெண் ஊழியரை ஓட்டலின் குளியலறையில் இருந்து அதிரடியாக மீட்ட போலீசார்..! காதலனால் நடந்தது என்ன..?
Jun 24, 2025 01:08 PM
23045
கார் நிறுவன பெண் ஊழியரை ஓட்டலின் குளியலறையில் இருந்து அதிரடியாக மீட்ட போலீசார்..!
சென்னை திருவான்மியூரில் காதலனுடன் ஓட்டல் அறையில் தங்கிய பெண்ணை வீடியோ கால் மூலம் தனது நண்பர்களுக்கு காட்ட முயன்றதால் பயந்து போன பெண் ஓடிச்சென்று குளியலறையில் பதுங்கிக் கொண்டு காவல்துறையினரை அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் வார இறுதி நாட்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர் பப்புகளில் ஆடி பாடி தங்கள் மன இருக்கத்தை போக்குவது வழக்கம். அந்தவகையில் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் ஐ.டி பிரிவில் பணிபுரிந்து வரும் 21 வயதான இளம் பெண் ஊழியர் ஓருவர், தனது தோழிகளுடன் வார இறுதி நாட்களில் பப்புக்கு செல்வதை வாடிக்கையாக்கி உள்ளார்.
அந்த வகையில் ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் ஃபப்பில் ஆட்டம் போடும் போது நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த ஷாகின் என்ற 23 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷாகினுடன் செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்டு பேசி நட்பை வளர்த்து வந்ததாக கூறப்படுகின்றது. ஷாகின் பிரபல செருப்பு நிறுவன டீலர் என்பதால் லட்சங்களில் பிசினஸ் செய்வதாக கூறி அந்த பெண்ணை தனது காதல் வலைக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
ஜோடிகள் இருவரும் திங்கட்கிழமை இரவு திருவான்மியூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இருவரும் படுக்கையில் பேசிக் கொண்டிருந்த போது தனது செல்போனை எடுத்த ஷாகின், அதில் வாட்ஸ் அப் குரூப்பில் வீடியோ காலை ஆன் செய்துள்ளார். எதிர் முனையில் நண்பர்கள் சிலர் வீடியோவில் தோன்ற, “ மக்கா பாத்தியா நான் யார் கூட இருக்கேன் பாரு” என்று கேமராவை டக்கென்று அந்த பெண் பக்கம் திருப்பி உள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் ஊழியர் போர்வையை எடுத்து போர்த்தியபடி செல்போனை எடுத்துக் கொண்டு ,அந்த அறையில் உள்ள பாத்ரூமில் சென்று பதுங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்த படியே தான் நம்பி வந்த பாய் பிரண்டு செய்த விபரீத செயல் குறித்து தனது தோழிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார். மேலும் அந்த ஓட்டலில் லொகேசனுடன் ஹெல்ப் மீ என்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் கூறப்படுகின்றது. உறவினர் ஒருவர் இது குறித்து காவல்துறையினரிடன் அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்ற திருவான்மியூர் உதவி ஆய்வாளர் ராஜா, அங்கு சோதனை நடத்தி குளியலறையில் பயந்து போய் பதுங்கி இருந்த அந்த பெண்ணை மீட்டனர். இளைஞர் ஷாகினை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் தான் விளையாட்டாக செய்ததாக கூறிய நிலையில் ஒரு பெண்ணை ஆபாசமாக படம் பிடிப்பது தவறான செயல் என்பதை சுட்டிக்காட்டி போலீசார் ஷாகினை கைது செய்தனர். ஆண் நண்பரை நம்பிச்சென்று விபரீத வில்லங்கத்தில் சிக்கிய அந்த பெண் ஊழியருக்கு தகுந்த அறிவுரை வழங்கிய போலீசார் அவர் தங்கி இருக்கும் இடத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu