RECENT NEWS

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

முகப்பு

முக்கால் சவரன் நகைக்காக மூச்சை நிறுத்திய கொடூரன்..! கதவு துவாரத்தில் ஷாக்...

Jun 23, 2025 05:06 AM

195

முக்கால் சவரன் நகைக்காக மூச்சை நிறுத்திய கொடூரன்..! கதவு துவாரத்தில் ஷாக்...

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள பாதரை மாரியம்மன் கோவில் குடி தெரு பகுதியை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி கண்ணம்மாள் .

இவருக்கு இரண்டு மகன்கள், ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்றொரு மகன் வீட்டின் அருகில் தனியாக வசித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மூதாட்டியின் மகன் மற்றும் உறவினர்கள் அனைவரும் மருதமலை கோவிலுக்கு சென்று இருந்த நிலையில், பக்கத்து வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். மதியம் சுமார் 3.30 மணியளவில் மூதாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் அவரது நகையினை பறிக்கும் நோக்கில், மூதாட்டியின் வாயில் புகையிலை மற்றும் துணியை நுழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகின்றது.

அப்போது கோவிலுக்கு சென்று இருந்த உறவினர்கள் திரும்பி வந்து மூதாட்டி இடம் இருந்த வீட்டு சாவியினை பெற்றுக்கொள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது.

நீண்ட நேரமாக அழைத்தும் மூதாட்டி வராததால் கதவு துவாரம் வழியாக உள்ளே பார்த்தபோது உள்ளே இருந்த மர்ம ஆசாமி மூதாட்டியின் வாயில் துணியை வைத்து நுழைத்துக் கொண்டிருந்ததை பார்த்ததும், உறவினர்கள் கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டியை கொலை செய்தது, பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த கூலித்தொழிலாளி சங்கர் என்பது தெரியவந்தது.

உறவினர்கள் ஊருக்கு சென்றதை அறிந்து இந்த கொடூரத்தை திட்டமிட்டு செய்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்படை போலீசார் சங்கரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து சுமார் முக்கால் சவரன் மதிப்பிலான தோடு மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மூதாட்டி கண்ணம்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி கிருஷ்ணன் சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார் . வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவம் வெப்படை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies