RECENT NEWS

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

Jul 13, 2025

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

Jul 13, 2025

முகப்பு

சட்டம் ஒரு பளார் அறை..! பாலியல் புகாரில் சிக்கிய சந்துருவுக்கு நடந்தது என்ன ?

Jun 23, 2025 07:17 AM

343

சட்டம் ஒரு பளார் அறை..! பாலியல் புகாரில் சிக்கிய சந்துருவுக்கு நடந்தது என்ன ?

சென்னையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நடக்கின்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அந்த வகையில் சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வந்த சந்துரு law அகாடமி என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வழக்கறிஞர் சந்துரு என்கிற சந்திரசேகரன் மீது அங்கு பயிற்சியில் ஈடுபட்ட இரு பெண் வழக்கறிஞர்கள் பாலியல் புகார் தெரிவித்தனர் அதன் பேரில் சந்துரு மீதும் அவருடன் பணியில் உள்ள மற்றொரு பெண் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்த நிலையில் சந்துரு தனக்கு பத்து பேர் கும்பலால் நேர்ந்த கொடுமை குறித்து பரபரப்பு புகார் ஒன்றை சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தமிழக டிஜிபி சங்கர் ஜி வாலிடம் அளித்திருக்கிறார்.

*அதில் தனது லாக் அகாடமியில் படித்த இரு இளைஞர்கள் மற்றும் இரு பெண்கள் அதாவது இந்த நான்கு பேரும் வழக்கறிஞர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் வகுப்பறையில் எல்லை மீறி நடந்து கொண்டதாகவும் அதனை சிசிடிவி யில் பார்த்து அவர்களை அழைத்து எச்சரித்ததாகவும் கூறியிருக்கிறார் சந்துரு.

*இதன் தொடர்ச்சியாக சம்பவத்தன்று தான் எச்சரித்த அந்த நான்கு பேரும் உடன் மேலும் சிலரும் என மொத்தம் 10 பேர் கொண்ட கும்பல் தனது law அகாடமிக்குள் நுழைந்து தன்னை கடுமையாக தாக்கி மிரட்டியதாக தெரிவித்திருக்கிறார்.

*அதோடு இல்லாமல் தன்னை மிரட்டி தனது லேப்டாப் மற்றும் கார் ஆகியவற்றை பறித்ததோடு அதனை தானே கொடுத்தது போல எழுதி வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார் சந்துரு, அதாவது அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் அதனால் அந்த அகாடமியை இதோடு நடத்தாமல் மூடுவதாகவும் அதற்கு பதிலாக தாங்கள் கட்டிய கட்டணத்திற்கு பதிலாக கார் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு கொடுப்பதாகவும் அவரிடம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

*தான் இனி வருங்காலங்களில் எக்காலத்தைக் கொண்டும் தன்னிடம் படிக்க வரும் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீர்களோ வேறு எந்த விதமான தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டேன் என்றும் அவரை வைத்து பேச வைத்து அதையும் ஒரு வீடியோவாக பதிவு செய்து வைத்து வழக்கறிஞர்களின் whatsapp குரூப்புக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.


இத்தனை செயல்களிலும் ஈடுபட்ட இரு இளைஞர்களில் ஒருவர் தமிழக எம்பி ஒருவரின் உறவினர் என்று கூறப்படுகிறது. தன்மீது தாக்குதல் நடத்தி தனது கார் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறித்து சென்ற அந்த 10 பேர் கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்துரு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

வேளச்சேரி போலீசார் இந்த வழக்கை எந்த அடிப்படையில் விசாரித்தனர். போலீசாரிடம் இருக்கும் ஆதாரம் என்ன ? சந்துரு சொல்வது உண்மையா ? அல்லது கார் லேப்டாப் போன்றவற்றை பறிகொடுத்து விட்டு தன் மீது உள்ள புகாரை மறைப்பதற்காக புதிய புகார் கொடுத்திருக்கிறாரா ? என்பது குறித்து உதவி ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்கின்ற இடத்தில் செய்தாலும்... படிப்பை காரணமாக வைத்து செய்தாலும்... மிரட்டலோ.. உருட்டலோ.. பரித்தலோ ...
அத்துமீறலோ குற்றம்..

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குடும்பமா? நாடா? வம்பிழுக்கிறாரா கம்பீர் ? கோலிக்கு  ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies