BIG STORIES
மாடல் அழகியின் கதை முடித்த Ex காதலன்.. திடுக்கிடவைக்கும் விவர பிண்ணணி..!
Jun 18, 2025 10:56 AM
192
கதை முடித்த Ex காதலன்
காணாமல்போன பிரபல மாடல் அழகி சீத்தல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று, தனது சகோதரி சீத்தலை காணவில்லை என்று நேகா என்பவர் பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சீத்தலை தீவிரமாக தேடிவந்த நிலையில், 16ந்தேதி பானிபட் நகரின் கார்கவுடா பகுதி கால்வாய் ஒன்றிலிருந்து கழுத்து அறுக்கப்பட்டநிலையில், சீத்தல் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் திடுக்கிடும் தகவல்களும், கொலை செய்தது யார்? என்ற பகிரங்க பின்னணியும் வெளிவந்துள்ளது.
இறந்த சீத்தல் என்கிற சிம்மி சவுத்ரி, ஹரியானா இசைத் துறையில் பணியாற்றிய ஒரு மாடல். மாடலிங் வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பு, சீத்தல் கர்னாலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
அப்போது சீத்தலுக்கும், அந்த ஹோட்டலின் உரிமையாளர் சுனில் என்பவருக்கும் இடையே நட்பாகி பின் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது . பின்னர், சுனிலை திருமணம் செய்து கொள்ள சீத்தல் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுனிலுக்கு திருமணமாகி ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் இருப்பதை பின்னர் அறிந்துகொண்ட சீத்தல், சுனிலிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அதைத்தொடர்ந்து, சுனிலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி, தான் செய்த ஹோட்டல் பணியிலிருந்து வெளியேறியதாகவும், சுனில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்யும்படி சீத்தலுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீத்தல் ஒரு ஆல்பம் படப்பிடிப்பிற்காக பானிபட்டில் உள்ள அஹார் கிராமத்திற்கு கடந்த சனிக்கிழமை வந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட சுனில், சம்பவத்தன்று இரவு 10:30 மணியளவில், சீத்தலை சந்திப்பதற்காக அங்கு வந்துள்ளார்.
பின்னர் சீத்தலை சந்தித்த சுனில், அவரிடம் நைசாக பேசி, தனது காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது இருவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருமணம் தொடர்பாக சுனில், சீத்தலிடம் பேச, மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 1.30 மணியளவில் சீத்தல் தனது சகோதரி நேஹாவுக்கு போன் செய்து, சுனில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். பின்னர் சீத்தலின் போன் கட்டானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீத்தலின் சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீஸில் சுனிலிடம் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், தனது கார் விபத்தில் சிக்கிவிட்டதாகவும், அப்போது கார் கால்வாயில் விழ, சீத்தல் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சுனிலின் பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், சீத்தலை கொன்றது தான்தான் என்று சுனில் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை சுனிலை கைது செய்த போலீஸார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu