RECENT NEWS

சிறுத்தையால் தாக்கப்பட்ட  4 வயது குழந்தை... 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்பு

முகப்பு

படிக்கனும் அதான் கொன்னேன்! சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம் 11/2 ஆண்டுக்கு பிறகு சிக்கிய காதலன்

Apr 16, 2025 12:43 PM

463

படிக்கனும் அதான் கொன்னேன்! சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்
11/2 ஆண்டுக்கு பிறகு சிக்கிய காதலன்

திரில்லர் படம் பார்த்து கொடூரக் கொலை.. போலீஸுக்கே தண்ணீ காட்டிய PHD மாணவர்

திரில்லர் சினிமாவை பார்த்து கொலை செய்த காதலன்… ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு சிக்கியது எப்படி? … காதலியின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

கடந்த 2015, மே 30ஆம் தேதி, ஹூப்ளி அருகே உள்ள விவசாய நிலத்தில் ஒரு பெண்ணின் உடல் பாதி மூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணின் முகப்பகுதி முழுமையாக சீர்குலைந்த நிலையில் இருந்ததால் அவர் யார் என்று போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.



அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் காணமல் போனவர்களின் புகைப்படங்களுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்துவந்துள்ளனர். பின்னர் 10 நாட்கள் சென்ற நிலையில், தனது மகள் மாயமானதாக தந்தை ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்த போலீசார், பெண்ணின் உடலை காண்பித்து, இது உங்கள் பெண்ணா? என்று பாருங்கள் என கூறியிருக்கின்றனர். அதைப்பார்த்த அவர், அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியின் லாக்கெட் மற்றும் உடை மூலம் தன்னுடைய மகள் தான் என கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.




இதையடுத்து இறந்தவர் விஜயபுராவைச் சேர்ந்த 24 வயது அர்பிதா கிரிமல்லா பிரதார் என்றும், வேளாண் அறிவியல் பல்கலைக்கழக மாணவி என்றும் தெரியவந்தது.

அர்பிதாவின் தங்கச் சங்கிலி இறந்த இடத்திலேயே கிடைத்ததால், அது ஆதாயத்திற்காக செய்யப்பட்ட கொலை அல்ல என்பதை போலீசார் உறுதிசெய்தனர். அதைத்தொடர்ந்து அர்பிதாவின் செல்போன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த போலீசார், இந்த கொலை சம்பந்தமான எந்த துப்பும் கிடைக்காததால் திணறிவந்தனர்.




அதைத்தொடர்ந்து, அர்பிதாவின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களிடம் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். தொழில்நுட்ப உதவியுடன் அர்பிதா அழைப்பு விவரங்கள் பதிவுகள் பார்த்தபோதும் ஏதும் சிக்கவில்லை. ஆனால் அர்பிதா, விஜயபுராவைச் சேர்ந்த அருண் சிவலிங்கப்பா பாட்டீல் என்ற தனது முன்னாள் வகுப்பு நண்பரை அடிக்கடி அழைத்திருந்தது தெரியவந்தது.



அருண், பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்று, பிஎச் டி படித்துவருபவர் என போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணையை தொடங்கிய போலீசார் அருணிடம் ”அர்பிதா கொலையாகும் போதும், அதற்கு முன்பும் நீங்கள் எங்கே இருந்தீர்கள்” என கேட்டனர். அதற்கு அவர் பெங்களூருவில் இருப்பதாக கூறியிருக்கிறார். அதனை சோதித்துபார்த்தபோது, அந்த நாட்களில் அவர் கல்லூரிக்கு வந்து சென்றிருப்பதும், அவருடைய மொபைல் சிக்னலும் அவரின் இருப்பிடத்தில் இருந்ததையே காட்டியது. அர்பிதா தனக்கு சிறந்த தோழி என்றும், ஆனால் அவர்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்றும் அருண் கூறியிருக்கிறார். இதனால், அவர் மீது தொடக்கத்தில் போலீசாருக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை.




ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கு குறித்து எந்த துப்பும் கிடைக்காததால், விசாரணையில் தோய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் அர்பிதாவின் நெருங்கிய வட்டாரங்களில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களின் கால் history-களை பரிசோதித்தனர். அப்போது அருணின் அழைப்புகளை பகுப்பாய்வு செய்ததில் அர்பிதாவுக்கு இறப்பதற்குமுன் சில நாட்கள் வரை தொடர் அழைப்புகளை மேற்கொண்டிருந்த அருண், அவர் கொலையான நாட்களில் இருந்து பின் அவரை தொடர்புகொள்ளவே இல்லை என்பதை அறிந்து மீண்டும் அருண் பக்கம் தங்களது கவனத்தை திருப்பினர்.




இதனை மேலும் உறுதிச்செய்துக்கொள்ள, பெங்களூருவில் உள்ள அருணின் அறையைச் சோதனை செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருண் கடந்த சில மாதங்களாக விசாரணை விவரங்களையும், காவல்துறையின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதையும் ஒரு டைரியில் எழுதிவைத்து அதனை மனப்பாடம் செய்துவந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அர்பிதா கொலையில் அருண் ஈடுபட்டிருப்பது தெளிவாகியதால், போலீசார் அருணை காவலில் எடுத்தனர். அர்பிதாவின் உடலில் இருந்து சேகரித்த கைரேகைகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தியதில் அருண் அந்த கொலையை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.




அதைத்தொடர்ந்து அருணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.. மேலும் அருண் அளித்த வாக்குமூலத்தில், அவர் 2014 -ல் வெளியான கன்னட க்ரைம் த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யாவால் ஈர்க்கப்பட்டு அதன்படி, நன்கு திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

சம்பவத்தன்று, தார்வாடில் தன்னைச் சந்திக்க அருண், அர்பிதாவை அழைத்திருக்கிறார். அர்பிதா பெங்களூருவிலிருந்து தார்வாட்டிற்கு அரசு பேருந்தில் சென்றிருக்கிறார். தனது செல்போனில் இருந்து அழைத்தால் மாட்டிக்கொள்வோம் என அருண் முன் கூட்டியே தனது செல்போனை அறையில் வைத்துவிட்டு, தார்வாடில் ஒரு கடையில் அர்பிதாவுக்கு போன் செய்திருக்கிறார்.

பின்னர் சந்தித்த இருவரும் ஹுப்பள்ளிக்கு அருகிலுள்ள உன்கல் ஏரிக்குச் சென்று மீண்டும், ஒரு ஆட்டோரிக் ஷாவில் கப்பூர் கிராஸ் நோக்கிச் சென்றிருக்கின்றனர். இரவு 7 மணியளவில், அர்பிதா அணிந்திருந்த துப்பட்டாவைப் பயன்படுத்தி அருண் அவரைக் கொன்றிருக்கிறார். பின்னர் அர்பிதா உடலை விவசாயப் பண்ணையில் புதைத்துவிட்டு, அதே இரவில் பெங்களூருக்குச் சென்றிருக்கிறார்.

அடுத்தநாள் கல்லூரிக்கு சென்ற அருண், வருகைப் பதிவில் முன்நாள் இருக்கும் தேதிக்கும் சேர்ந்து கையெழுத்திட்டிருக்கிறார். இந்த நிலையில் அர்பிதாவை கொலை செய்ததற்கான காரணத்தையும் அருண் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். அருணும் அர்பிதாவும் ஒரே கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்ததாகவும், இருவரும் காதலித்து வந்துள்ளனர். அருண் முனைவர் பட்டம் படிக்கச் சென்ற நிலையில், அர்பிதா படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.. இதனைத் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அர்பிதா அருணிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிடுவதாக அருணை மிரட்டியும் இருக்கிறார்.




இந்த நிலையில், தனது லட்சியத்திற்கு, அர்பிதா ஒரு தடையாக இருப்பதாக கருதிய அருண், திருமணத்தை வைத்து தன்னை மிரட்டத் தொடங்கிய ஆத்திரத்தில் அர்பிதாவைக் கொல்ல முடிவு செய்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக அருண் கைது செய்யப்பட்டபின் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு தற்போது 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. இந்த வழக்கில் உள்ள முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அதிகாரிகள், அருணும் அர்பிதாவும் ‘A&A’ எனக் குறிக்கப்பட்ட ரிங்குகளை அணிந்திருந்ததும் ஒரு ஆதாரமாக அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies