RECENT NEWS

நாளை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்

நாளை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்

Apr 29, 2025

நாளை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்

நாளை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம்

Apr 29, 2025

முகப்பு

காதலனுடன் ஓடிச்சென்ற மகள்... கொன்று பாத்ரூமில் வைத்த தந்தை! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எப்படி?

Apr 11, 2025 01:47 PM

466

காதலனுடன் ஓடிச்சென்ற மகள்... கொன்று பாத்ரூமில் வைத்த தந்தை! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எப்படி?

காதலனுடன் ஓடிச்சென்ற மகள்... கொன்று பாத்ரூமில் வைத்த தந்தை! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எப்படி?

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்தால் தனது சொந்த மகளையே அவரது தந்தை கொடூரமாக கொலை செய்து, பின் வீட்டு பாத்ரூமில் மகளின் உடலை வைத்து பூட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமாஸ்திபூரை சேர்ந்தவர் முகேஷ் சிங். இவர் முன்னாள் ராணுவ வீரர் எனக் கூறப்படுகிறது. இவரது மகள் சாக்ஷி. இவருக்கு 25 வயதாகிறது.

முகேஷ் சிங் வீட்டிற்கு அருகே வசித்து வந்த இளைஞரும், சாக்ஷியும் ஒன்றாக கல்லூரியில் படித்துள்ளனர். நண்பர்களாக பழகிவந்த நிலையில், இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துபோக, இருவரும் காதலித்துவந்துள்ளனர்.

இதனையெடுத்து, தந்தை முகேஷ்க்கு தான் காதலிப்பது தெரியவந்தால், பிரித்துவிடுவாரோ என பயந்துபோன சாக்ஷி, தனது காதலுடன் சென்றுவிடலாம் என முடிவு எடுத்திருக்கிறார். இதற்கு சாக்ஷியின் காதலனும் ஓகே சொல்ல, இருவரும் கடந்த மாதம் 4ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, டெல்லிக்கு சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, அங்கேயே இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தனது மகள் டெல்லியில் இருப்பதை அறிந்த முகேஷ் சிங், மகளை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். பின்னர், தனது மகளை சமாதனம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் வீட்டுக்குள் வந்ததும் சாக்ஷியை கீழே தள்ளிய முகேஷ், ”அடுத்த சாதி பையனுடன் ஓடுவாயா?” எனக் கேட்டு கடுமையாக தாக்கிருக்கிறார்..

தனது தந்தை சமாதனம் செய்துபோல் நாடகமாடி தன்னை அழைத்துவந்ததை உணர்ந்த சாக்ஷி, தந்தையிடம் தன்னை விட்டுவிடும் படி கதறி அழுது இருக்கிறார்.

ஆயினும் ஆத்திரம் தாங்காத முகேஷ், பெற்ற மகள் என்று கூட பாராமல் அவரை கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரிய கூடாது என தனது வீட்டு அருகேயுள்ள, பாத்ரூமில் வைத்து உயிரிழந்த மகளின் உடலை பூட்டி வைத்துள்ளார்.

பின்னர் ஏதும் தெரியாதது போல் சாதரணமாக இருந்துவந்துள்ளார். அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு முகேஷின் மனைவி மகள் எங்கே? என்று கேட்க, மீண்டும் அந்த பையனுடன் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாத்ரூமிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. அதையெடுத்து பாத்ரூமை திறந்து பார்க்கும்போது, இறந்த நிலையில், சாக்ஷியின் உடல் இருந்ததை கண்டு, போலீசார் அதிர்ந்துபோயினர்.

பின்னர் இது தொடர்பாக, முகேஷிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தியபோது, முகேஷ் தனது மகளை கொலை செய்தத ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், தன் மகளை கொலை செய்தபின், அந்த இளைஞரையும் கொலை செய்ய சென்றதாகவும், ஆனால் அவர் அங்கே இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் கூறியிருக்கிறார்.

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்தால், தனது சொந்த மகளிடம் நாடகமாடி, அவரை கொடூரமாக கொலை செய்து, பின் வீட்டு பாத்ரூமில் மறைத்துவைத்த தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இன்னோவா அரக்கன்.. தூங்கு மூஞ்சி ஓட்டுனர்.. குடும்பமே பலியான சோகம்..! ஓட்டுனர்கள் இதை செய்யாதீங்க

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies