முகப்பு
வேறி ராங் Bro.. ஒரு நம்பர் மாத்தி போட்டதிற்கு.. எவ்ளோ பெரிய கலவரமா? செல்போனால் வந்த சண்டை..!
Apr 10, 2025 01:41 PM
204
கவனக்குறைவால் ஏற்பட்ட கலவரம்.. வடிவேலு பட பாணியில் நடந்த ரகளை!
தவறுதலாக ஒரு எண்ணிற்கு கால் செய்து, பின் அதுவே கைகலப்பாக மாறிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. நடிகர் வடிவேலு பட பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த கமலேஷ். இவர் நெல்லையில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலை முடிந்துவிட்டு, தனது நண்பரிடம் பேசுவதற்காக செல்போனில் சில எண்களை டயல் செய்திருக்கிறார். அப்போது அவரது நண்பருக்கு பதிலாக, தவறுதலாக கழுகுமலையில் உள்ள ஆறுமுகம்நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் செல்போனுக்கு கால் சென்றுள்ளது.
முதலில் தவறுதலாக தான் போன் செய்து விட்டதாக கமலேஷ் கூற, கருப்பசாமி ஒற்றும் சொல்லாமல் வீட்டிருக்கிறார். பின்னர் அந்த நம்பரை சரிப்பார்க்கலாம் என கமலேஷ் முயன்றபோது, தவறுதலாக, மீண்டும் கருப்பசாமிகே கால் போய் உள்ளது. இதனால் கடுப்பான கருப்பசாமி, கமலேஷை வாய்க்கு வந்தபடி திட்டிருக்கிறார். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.
அப்போது, நடிகர் வடிவேலு பட பாணியில், ” நீ எங்க இருக்க உன் முகவரியை சொல்லுடா” என கருப்பசாமி கேட்க, அதற்கு கமலேஷ், “ஆறுமுகம்நகர் பஸ்நிறுத்தம் அருகே நான் வருகிறேன் தைரியம் இருந்தா நீ வா” என கருப்பசாமியிடம் கூறியுள்ளார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த கருப்பசாமி, தனது நண்பர்களான மதன்குமார், மதன்கிருஷ்ணகுமார் ஆகியோருடன் ஆறுமுகம்நகர் பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றிருக்கிறார்.அப்போது அங்கு கமலேஷ், தனது அண்ணன் மாதேஷ் மற்றும் உறவினர்களுடன் வந்திருக்கிறார். இதையெடுத்து, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, மதன்குமார், கமலேஷ் உள்ளிட்ட 5 பேரையும் கைதுசெய்தனர்.
கவனக்குறைவாக ஒரு நம்பர் மாத்தி போட்டதிற்காக எவ்ளோ பெரிய கலவரம்? என அப்பகுதிமக்கள் வாயடைத்து போய்யிருக்கிறார்களாம்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu