முகப்பு
ஏடிஎம் மிஷினில் தகடு வைத்து நூதன முறையில் பணம் திருடிய வடமாநில நபர்.. வெளியான சிசிடிவி
Jun 24, 2025 11:15 AM
83
ஏடிஎம் மிஷினில் தகடு வைத்து நூதன முறையில் பணம் திருடிய வடமாநில நபர்..
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் ஏடிஎம் மையங்களில் மிஷினில் தகடு வைத்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதனமுறையில் திருடிய வடமாநில நபரின் புகைப்படத்தையும், சிசிடிவி காட்சியையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
தொப்பி அணிந்து ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அந்த வட மாநில நபர், மெஷினில் பணம் இடத்தில் தகடு ஒன்றை வைத்துவிட்டு சென்று விடுகிறார்.
இதனையடுத்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பின் நம்பர் பயன்படுத்தியும் பணம் வராமல் வெளியே சென்ற உடன், மீண்டும் உள்ளே வந்த அந்த இளைஞர், தகடை எடுத்து விட்டு பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
பல மாதங்களாக இதே போல பல ஏடிஎம்களில் பணத்தை திருடிச்சென்ற வட மாநில நபரை தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu