முகப்பு
போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த்.. விசாரணையில் வெளியான திடுக் வாக்குமூலம்
Jun 24, 2025 11:40 AM
145
போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த்.. விசாரணையில் வெளியான திடுக் வாக்குமூலம்
தான் போதைப்பொருளை பயன்படுத்தியதாகவும், தவறு செய்து விட்டேன் என்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
போதைப்பொருளை வாங்கி பயன்படுத்திய புகாரில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, தனது குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் நிலையில், மகனை கவனித்து கொள்ள ஜாமீன் வழங்குமாறு ஸ்ரீகாந்த் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலமாக 8 முறை ஸ்ரீகாந்திற்கு கொகைன் சப்ளையாகி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், இருவரையும் ஒன்றாக விசாரிக்கும் வகையில் அவர்களை காவலில் எடுக்க காவல்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பார் மோதல் வழக்கில் பிரசாத் சிறைக்கு செல்லும் முன் 250 கிராம் கொக்கைன் தன்னிடம் கொடுத்தாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பிரசாத் தன்னை வைத்து படம் தயாரித்த நிலையில், 10 லட்ச ரூபாய் பாக்கியை கேட்டபோது கொகைன் கொடுத்து பிரசாத் பழக்கப்படுத்தியதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பணம் கேட்கும் போதெல்லாம் கொகைன் கொடுத்து பிரசாத் பழக்கத்தை அதிகப்படுத்தியதாகவும் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu