BIG STORIES
பிச்சைக்காரியை கூட விட்டு வைக்காத டாஸ்மாக் அரக்கன்.. சென்னையில் நடந்த கொடுமை..! சடலத்துடன் அந்த மாதிரியா ?
Feb 25, 2026 01:48 AM
12
பிச்சைக்காரியை கூட விட்டு வைக்காத டாஸ்மாக் அரக்கன்.. சென்னையில் நடந்த கொடுமை..! சடலத்துடன் அந்த மாதிரியா ?
சென்னை முகப்பேரில் யாசகம் எடுத்து பிழைத்து வந்த பெண்ணை பலாத்கார முயற்சியில் கொலை செய்ததாக 26 வயது போதை இளைஞரை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு , சடலத்துடன் அரக்கத்தனமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் தெரு அருகே உள்ள பேக்கரி கடையின் அருகே காலி நிலத்தில் பெண் ஒருவர் ரத்தகாயங்களோடு உடலில் ஆடைகளின்றி சடலமாக கிடப்பதாகவும், அவர் மேல் இளைஞர் ஒருவர் படுத்து இருப்பதாகவும் ஜெஜெ நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் , கண் மண் தெரியாத போதையில் சடலத்தின் மீது படுத்து கிடந்த இளைஞரை எழுப்பினர். கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போதை இளைஞரை காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த இளைஞர் மதுரையை பூர்வீகமாக கொண்ட ஷேக் (26) என்பதும், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், குடும்பம் சொந்த ஊரில் உள்ள நிலையில் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு சர்ச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திவிட்டு மதுபோதையில் இருந்த போது சாலையோரம் யாசகம் கேட்ட 55 வயது மதிக்க தக்க பெண்ணை தனியாக அழைத்து சென்றுள்ளான்.
அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த நிலையில் உறவுக்கு அழைத்துள்ளான். அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால், பேக்கரி கடைக்கு அருகே உள்ள ஆளில்லாத இருட்டுப் பகுதிக்கு . அத்தோடில்லாமல் அந்த பெண்ணின் தலையை பிடித்து இழுத்து சுவற்றில் மோதி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அந்த பெண் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இத்திலேயே பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது. சிறிது நேரத்தில் அங்கு இருந்து சென்ற ஷேக் அதிகாலையில் பிளாக்கில் மது வாங்கி அருந்திவிட்டு மீண்டும் அந்த இடத்திற்கு வந்துள்ளான். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்துடன் , மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த பெண் இறந்தது தெரியாததால் போதை மிகுதியால் சடலத்தின் மேலே படுத்து உறங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
மித மிஞ்சிய மதுபோதையில் இருந்ததால் ‘டாஸ்மாக் அரக்கன்’ ஷேக்கிடம் முழுமையான விசாரணை நடத்தமுடியாமல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பாக சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் சுவற்றில் சிதறி கிடந்த ரத்த மாதிரிகளையும், அங்கு கிடந்த மண் வெட்டி கட்டைகள் போன்றவை மதுபாட்டில்கள் போன்றவற்றை தடவியல் சோதனைக்காக கைப்பற்றி எடுத்து சென்றனர்.
இது குறித்து சம்பவம் நடைப்பெற்ற இடத்திற்கு அருகே இளநீர் கடை வைத்து இருக்கும் வியாபாரி ஒருவர் கூறும் போது , காலை 7:30 மணியளவில் , இருவர் உடலிலும் துணிகள் இல்லாமல் கிடந்தாகவும் அருகே மதுபாட்டில்கள் இருந்ததாகவும், தாய் வயதுடைய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனை இளநீரை சீவது போல சீவவேண்டும் என ஆவேமானார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu