இந்தியா
கதையை முடித்த சைக்கோ.. விடிய விடிய ஆபாச படம்.. பிரியாணி நாடகம் அம்பலம்..!
Jan 24, 2026 06:34 AM
93
கதையை முடித்த சைக்கோ
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு. இவரது மனைவி லட்சுமி மாதுரி. இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் ஆகி, 2 மகன்கள் உள்ளன. லோகம் சிவநாகராஜு வெங்காயம் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 19 ஆம் தேதியன்று அதிகாலை 4 மணி அளவில் லட்சுமி மாதுரி கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், என்ன ஆனது? என பதற்றத்தோடு கேட்க, தனது கணவர் நெஞ்சு வலியால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் நாகராஜுவின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இறுதி சடங்கில் பங்கேற்றனர். அப்போது இறந்த நாகராஜுவின் காதில் ரத்தம் இருப்பதை அவரின் நண்பர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து இதை நாகராஜுவின் தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளனர் .
இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜுவின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக வழக்கு பதிவு செய்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்வின் அறிக்கையை பார்த்த நாகராஜுவின் குடும்பத்தாருக்கும், போலீசாருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் நாகராஜுவின் மார்பு எலும்புகள் உடைந்திருப்பதும், சுவாசம் தடைப்பட்டதாலேயே அவர் இறந்ததும் தெரிய வந்தது.
இதனால் போலீசார் லட்சுமி மாதுரியிடம் விசாரணையை தொடங்கினர். அப்போது லட்சுமி மாதுரியின் போனை சோதனை செய்தபோது, அவர் இறுதியாக கோபி என்பவரிடம் பேசியதும், அன்று இரவு முழுவதும் மொபைலில் ஆபாச வீடியோக்களை பார்த்ததும் தெரிய வந்தது.
போலீசார் லட்சுமி மாதுரியிடம் கிடுக்குப் பிடி கேள்விகளால் துளைத்தெடுத்த போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன. லட்சுமி மாதுரி தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அடிக்கடி தியேட்டருக்கு வந்து சென்ற கோபியோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், பின்னர் அது தகாத உறவாக மாறியுள்ளது.
கோபி ஐதராபாத்தில் டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். லட்சுமி மாதுரி தனது கணவருடன், கோபியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். தனது கணவருக்கு ட்ரைவிங் தெரியும் என்பதால் வெங்காய வியாபாரத்தை விட ட்ரைவர் வேலையில் நன்றாக சம்பாதிக்கலாம் என மனதை மாற்றி, கணவர் நாகராஜுவை கோபியின் ட்ராவல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து வைத்துள்ளார். இதனால் அவர்கள் ஐதராபாத்தில் தங்கி வந்துள்ளனர்.
தான் வேலைக்கு சென்ற பின்னர் லட்சுமி மாதுரியும் கோபியும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததை அறிந்த நாகராஜு தனது மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் சிலுவூருக்கு வந்து பழைய படி வெங்காய வியாபாரத்தை தொடர்ந்துள்ளார்.
ஆனால் வீட்டிற்கு வந்த பின்னும் லட்சுமி மாதுரி கோபியுடன் இருந்த உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜு இருவரின் உறவை கண்டித்ததோடு அதுகுறித்து அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கணவர் உயிரோடு இருக்கும் வரை கோபியோடு உறவை தொடர முடியாது என நினைத்த லட்சுமி மாதுரி கோபியோடு சேர்ந்து கொலை திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி கடந்த 18ஆம் தேதியன்று இரவு, லட்சுமி மாதுரி தனது கணவருக்கு பிடித்த உணவான பிரியாணி சமைத்துள்ளார். அந்த உணவில் 20 தூக்க மாத்திரைகளை பொடியாக மாற்றி கலந்துள்ளார்.
ஆசையாக பிரியாணி சாப்பிட்ட நாகராஜு இரவு 11.30 மணி அளவில் மயங்கியுள்ளார். கணவர் மயங்கி கிடப்பதை பார்த்த லட்சுமி மாதுரி, தனது காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் நாகராஜு மயக்கத்தில் இருந்தபோது, கோபி நாகராஜுவின் மார்பில் அமர்ந்து கொள்ள, லட்சுமி மாதுரி தலையணை எடுத்து கணவரின் முகத்தில் மூச்சு விடாதபடி அழுத்தியதாகவும், இதில் நாகராஜு மூச்சு விட முடியாமல் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், இரவு முழுவதும் லட்சுமி மாதுரி ஆபாச படங்களை பார்த்து அன்றைய இரவை கழித்துள்ளார். அதிகாலை 4 மணி ஆனதும், அழுதபடி கணவர் நெஞ்சு வலியால் உயிரிழந்து விட்டதாக நாடகமமாடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து லட்சுமி மாதுரியை போலீசார் கைது செய்தனர். மேலும் லட்சுமி மாதுரியின் காதலன் கோபி தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu