முகப்பு
காதல் விவகாரத்தில் அரசு வக்கீல் கொலை லாரி ஓட்டுனர் ஆத்திரம் ஏன் ? வெளியானது பரபரப்பு தகவல்
Dec 05, 2025 01:42 AM
9
அரசு வழக்கறிஞர் கொடூர கொலை ஏன் ? திமுக வக்கீல் கொலையில் திடுக்கிடும் தகவல்..
தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள நடுபல்க் சிக்னல் அருகே பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்த திமுகவை சேர்ந்த அரசு வழக்கறிஞரான முத்துக்குமாரசுவாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டியதாக கூறப்பட்ட நபர் சாவகாசாமாக நடந்து சென்று தனது இரு சக்கரவாகனத்தில் ஏறி சென்ற புகைப்படங்கள் வெளியானது.
இதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே புகைப்படங்களை வைத்து கொலையாளியை அடையாளம் கண்ட போலீசார் அவர் சொந்தமாக லாரி ஒன்ரை வைத்து தொழில் செய்து வரும் சிவசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. ஆவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிக்கிடந்தது. அவரது மனைவி குழந்தைகள் என யாரும் அங்கே இல்லை. இதையடுத்து , செல்போன் நம்பரை வைத்து சிவசுப்பிரமணி பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் அவரது செல்போன் கேரளாவில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே அவரது செல்போனில் இருந்து , ரெயிலில் சென்று கொண்டிருக்கும் அவரது மனைவியிடம் அவர் பேசி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து சிவசுப்பிரமணியனின் மனைவியை சுற்றி வளைத்த போலீசார், அவரை தென்காசி அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் கொலை குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
லாரி தொழில் செய்து வரும் சிவசுப்பிரமணியன், லாரியில் பாரம் ஏற்றிக் கொண்டு வெளி மாநிலங்களுக்கு சென்றால் ஒரு மாதம் வரை அங்கேயே தங்கி இருந்து , மீண்டும் பாரம் ஏற்றிக் கொண்டு ஊர் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரது மகளை மருத்துவமனை அழைத்துச்செல்ல வழக்கறிஞர் முத்துகுமார சாமி , சிவசுப்பிரமணியனின் மனைவிக்கு உதவியதாக கூறப்படுகின்றது.
அடிக்கடி அந்த சிறுமியை மருத்துவமனைக்கு தனது வாகனத்தில் அழைத்து சென்றதால் முத்துக்குமார சாமிக்கும், சிவசுப்பிரமணியனின் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது விவகாரம் சிவசுப்பிரமணியனுக்கு தெரியவந்துள்ளது. அவர் தனது மனைவியை கண்டித்ததுடன், மகளின் சிகிச்சைக்காக குடும்பத்தினரை சென்னை அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த மகள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசுப்பிரமணியன் குடும்பத்துடன் தென்காசி திரும்பி உள்ளார். இந்த நிலையில் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி மீண்டும் சிவசுப்பிரமணியனின் மனைவியை உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகின்றது. “மகளை பறிகொடுத்து விட்டு வந்திருக்கிறேன், எனது மகனும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறான் என்னை விட்டு விடுங்கள்” என்று அவர் மறுத்ததாக கூறப்படுகின்றது.
இருந்தாலும் விடாமல் முத்துக்குமாரசாமி டார்ச்சர் செய்ததாகவும் , இது குறித்து தனது கணவர் சிவசுப்பிரமணியத்திடம் கூறி அவர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை தீர்த்துக் கட்ட திட்டமிட்ட லாரி ஓட்டுனர் சிவசுப்பிரமணியன், முதலில் தனது மனைவியின் சகோதரர் சதீஷை அழைத்து தனது மனைவி குழந்தைகளை பத்திரமாக சென்னைக்கு அழைத்து போ.. எனக்கூறி விட்டு கையில் அரிவாளுடன் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை தேடிச்சென்றுள்ளார்.
அங்கு சக வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருந்த முத்துகுமார சாமியை சரமாரியாக வெட்டி விட்டு , பைகிகில் ஏறி கேரளாவுக்குள் சென்றது சிவசுப்பிரமணியனின் மனைவி அளித்த வாக்குமூலத்தின் படி தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிவசுப்பிரமணியன் தனது செல்போனை சேற்றில் வீசி சென்ற நிலையில் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் கேரளா போலீசார் சிவசுப்பிரமணியனின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த நபர் குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu