RECENT NEWS

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

Dec 06, 2025

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

Dec 06, 2025

BIG STORIES

திமுக Ex எம்.பியின் வீட்டில் துணிகரக் கொள்ளை..நகை பணத்தை அள்ளினர்..! போலீசார் தீவிர விசாரணை

Dec 02, 2025 06:28 AM

55

திமுக Ex எம்.பியின் வீட்டில் துணிகரக் கொள்ளை..நகை பணத்தை அள்ளினர்..! போலீசார் தீவிர விசாரணை

திமுக Ex எம்.பியின் வீட்டில் துணிகரக் கொள்ளை..நகை பணத்தை அள்ளினர்..! போலீசார் தீவிர விசாரணை

திமுக முன்னாள் எம்.பி, ஏ.கே.எஸ் விஜயனின் தஞ்சாவூர் வீட்டில் 300 சவரன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்பட்ட நிலையில் 87 சவரன் நகைகள் களவு போனதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஐபி வீட்டில் கைவைத்த வில்லங்க கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை 15 வருடங்கள் நாகப்பட்டினம் தொகுதியில் திமுக எம்.பியாக வெற்றிபெற்ற்வர் ஏ.கே.எஸ். விஜயன்.இவர் 2021 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக பெறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு வீடு இருக்க, தஞ்சையில் உள்ள வீட்டில் மனைவி ஜோதிமணியும் 7 ஆம் வகுப்பு படிக்கின்ற மகளும் வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று ஜோதிமணி, வீட்டை பூட்டி விட்டு தனது மகளுடன் வெளியூர் சென்று திரும்பிய நிலையில் வீட்டின் உள்பக்க கேட்டின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது. வீட்டிற்குள் புகுந்து பீரோக்களை உடைத்து சுமார் 300 சவரனுக்கும் அதிகமான நகை பணத்தை அள்ளிச்சென்றதாக தகவல் வெளியானது.

அரசியல் செல்வாக்கு மிக்க விஜயனின் வீடு என்பது தெரியவந்ததும் , காவல் அதிகாரிகள் ஏராளமான போலீசாருடன் நேரடியாக வீட்டிற்கு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். வீட்டை சுற்றியும் தடயங்களை சேகரித்த தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர்

ஏ.கே.எஸ். விஜயன் , பழம் பெரும் கம்யூனிஸ்ட் இயக்க தலைவரரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஏ. கே. சுப்பையாவின் மகன் என்றாலும், திமுகவில் தொடர்ந்து 15 வருடங்கள் எம்.பியாக இருந்ததால் அவர் வசதியாக வாழ்ந்து வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

விஜயனின் வீட்டை சுற்றி சிசிடிவி பொறுத்தப்பட்டிருந்த நிலையில் , சுவர் ஏறிக்குதித்த கொள்ளையர்கள், தங்கள் முகம் சிசிடிவி காமிராவில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக இணைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் உள்ளே பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள ஏ.கே.எஸ்.விஜயனின் மனைவி ஜோதிமணி, தனது வீட்டில் இருந்து 87 சவரன் நகைகள் களவு போயிருப்பதாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். கொள்ளையர்கள் சிக்கினால் தான் , மொத்தம் அள்ளிச்சென்ற நகைகள், பணம் எவ்வளவு ? என்ற முழுவிவரம் தெரியவரும் என்று கூறப்படுகின்றது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

வில்லா வில்லன்கள்.. ரூ 1.5 கோடிக்கு வாங்கினோம்.. தண்ணீரில் தவிக்கிறோம்..! குடியிருப்பு வாசிகள் வேதனை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies