RECENT NEWS

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

Dec 06, 2025

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பணம் மோசடி

Dec 06, 2025

முகப்பு

பொய்த்த வானிலை அறிக்கை..? வெளுத்து வாங்கிய மழையால் மாணவர்களின் பெற்றோர் ஆதங்கம்..

Dec 01, 2025 04:25 PM

359

பொய்த்த வானிலை அறிக்கை..? வெளுத்து வாங்கிய மழையால் மாணவர்களின் பெற்றோர் ஆதங்கம்..

வானிலை ஆய்வு மையம் சென்னையில் மழை பெய்யாது என்று கணித்த நிலையில் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் கொட்டும் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு திரும்பினர்.


தகவல் தொழில் நுட்பம் , வானிலை அறிவியல் முன்னேறியுள்ள இந்த சூழலிலும் சில நேரங்களில் வானிலையை சரியாக கனிக்க முடியாத காரணத்தை விளக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் திங்கட்கிழமை கொட்டித்தீர்த்துவரும் மழை ..!

மழை பொழியுமா ? பொழியாதா ? என்பதை கூட முன்கூட்டி தெரிவிக்க இயலாமல் மழை அடித்து வெளுக்கும் போது இன்னும் 2 மணி நேரத்துக்கு கனமழை பொழியும் என்று சொல்வது எப்படி முன் எச்சரிக்கை அறிவிப்பு ஆகும் ? என்று ஆதங்க கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.

சென்னையில் சனிக்கிழமை பெரிய அளவில் மழை பொழிவு இல்லாத சூழலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் , வானிலை ஆய்வு மையத்தின் முன் எச்சரிக்கை அறிவிப்பை பின்பற்றியே விடுமுறை அறிவிக்கின்றனர் . வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிவிப்பை வெளியிடும் போது ஒரு சில இடங்களில்.. என்றும் மழை பெய்ய வாய்ப்பு என்றும் எச்சரிக்கையான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் சென்னைக்கு வானிலை அறிக்கை பொய்த்து போயிருக்கின்றது.

காலை 10 மணிக்கு பின்னர் மழை இருக்காது என்ற வானிலை மையத்தின் அடுத்த கணிப்பும் பொய்த்து போய் சென்னையில் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே மழை நீர் தேங்கியதால் பாதிப்புகுள்ளான பல பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளை தாங்களாகவே வீட்டுக்கு அனுப்ப தொடங்கினர்.

மழையில் நனைந்தபடியே மாணவர்கள் சாலையில் தேங்கிய மழை நீரில் திக் திக் மன நிலையில் நடந்து சென்றனர்.

காலையில் வாடகைக்கு ஆட்டோ கிடைக்காமல் பதறியடித்து இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை பள்ளியில் விட வந்த பெற்றோர், மாலையில் முன் கூட்டியே பள்ளிகளில் இருந்து வந்த அழைப்பை அடுத்து தங்கள் பிள்ளைகளை அழைத்துச்செல்ல பள்ளிகளுக்கு முன்பு திரண்டதால் , நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த அவல நிலை சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நிகழ்ந்தது, குறிப்பாக கும்மிடிபூண்டியில் உள்ள சுரங்கபாதையில் முழங்கால் அளவு தேங்கிய மழை நீரில், வாகனங்களே சிக்கித்திணறி சென்ற நிலையில், மாணவிகளும் தங்கள் பெற்றோரின் கைகளை பிடித்துக் கொண்டு பதற்றத்துடன் கடந்து சென்றனர்.

மழை காரணமாக மாணவ மாணவிகளும், போக்குவரத்து நெரிசலால், மற்ற வாகன ஓட்டிகளும், கடும் அவதிக்குள்ளாயினர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

வில்லா வில்லன்கள்.. ரூ 1.5 கோடிக்கு வாங்கினோம்.. தண்ணீரில் தவிக்கிறோம்..! குடியிருப்பு வாசிகள் வேதனை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies