RECENT NEWS

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம்
வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம் வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!

Dec 05, 2025

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம்
வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம் வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!

Dec 05, 2025

முகப்பு

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம் வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!

Dec 05, 2025 01:55 AM

7

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம்
வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!

பூகம்பமாய் வெடித்த போலி மாத்திரை தொழிற்சாலை விவகாரம்.. மூடி மறைக்கிறாரா CM? யாருக்கெல்லாம் ஆபத்து?!


தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘ஸ்ரேசன் Pharmaceutical Manufacturer’ என்கிற மருந்து நிறுவனத்தின் கலப்படம் செய்யப்பட்ட ‘கோல்டிரிஃப்’ இருமல் மருந்தை சாப்பிட்ட 25 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து பரிதாபாக உயிரிழந்ததோடு, இன்னும் சில குழந்தைகள் சிகிச்சையில் உயிருக்கு போராடிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தியாவுக்கே அவமானத்தை ஏற்படுத்திய விவகாரம் ஓய்வதற்குள்ளேயே, புதுச்சேரியில் போலி மருந்து- மாத்திரை தொழிற்சாலை இயங்கியது கண்டிபிடிக்கப்பட்டிருப்பது, மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போலி மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை யார் யாரெல்லாம் உட்கொண்டார்கள்? அவர்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டது? என்ற அதிர்ச்சி கேள்விகளும் எழும்பியுள்ளன.

டெல்லியைச்சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான 'சன் பார்மசி' நிர்வாகம், தங்கள் நிறுவன மருந்துகள் பெயரில், புதுச்சேரியில் போலியாக தயாரிப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். அதில், மதுரையை சேர்ந்த ராஜா என்பவர், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் தங்கி, காரைக்குடியை சேர்ந்த ஏ.கே.ராணா (45) மெய்யப்பன் (46) ஆகியோரின் பெயரில் போலி லைசென்ஸ் பெற்று, புதுச்சேரியில் பல இடங்களில் கடந்த 5 ஆண்டுகளாக போலி மருந்து- மாத்திரைகள் தயாரித்து வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, போலியாக லைசென்ஸ் தயாரித்து கொடுத்த ராணா, மெய்யப்பன் ஆகியோரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் டி.ஐ,ஜி. சத்தியசுந்தரம், எஸ்.பி. சுருதி, இன்ஸ்பெக்டர் பாபுஜி, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இந்துமதி, ஜெனிஃபர், ஆண்டோ உள்ளிட்ட குழுவினர் ராஜாவுக்கு சொந்தமான ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், குருமாம்பேட்டில் ஒரு குடோனிலும், மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் உள்ள இரண்டு குடோன்களிலும் சோதனை நடத்தினர்.

24 மணி நேரம் நடந்த சோதனையில், கைதானவர்கள் சொன்ன தகவலின்பேரில் திருபுவனைபாளையத்தில் செயல்பட்டு வந்த ‘லார்வன்’ மருந்து தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டு, 36 அறைகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நோய்களுக்கான மாத்திரைகள், மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நவம்பர்-29 ஆம் தேதி 2-வது நாளாக புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சோதனை நடத்தினர்

அங்கு 2 நாட்களாக நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போலி மாத்திரைகள், மருந்து உபகரணங்கள், மூலப்பொருட்களின் மொத்த மதிப்பு பல கோடி மதிப்பில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

போலி மருந்து தயாரிப்பு கூடங்களை மாநில சுகாதாரத்துறை செயலர் சவுதாரி முகமது யாசின் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், மத்திய மருந்துகள் தர ஆய்வாளர் தேவகிரி தலைமையிலான குழுவினர், பறிமுதல் செய்த மருந்துகளின் மாதிரிகளை ஆய்வுக்கு கொண்டு சென்றனர். போலி மருந்து தயாரித்த மூன்று குடோன்களையும் நீதிமன்ற உத்தரவை பெற்று, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி தலைமையிலான குழுவினர் 'சீல்' வைத்தனர். இந்த மோசடி தொடர்பாக மேலும் 7 குடோன்களில் சோதனை நடத்த வேண்டியுள்ளது எனவும் கூறப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் போலி மருந்து தொடர்பாக ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் புதுச்சேரியில் இருந்து போலி மருந்து தயாரித்து வந்தது தெரியவந்தது.

ஆய்வு செய்த மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி கூறுகையில், "ஆய்வுக்கு மாத்திரைகள் எடுத்துள்ளோம். அதன்பிறகே இது காலாவதியா, போலியா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும்" என்றார்.

இந்த ஆய்வில் எஸ்பிக்கள் ரகுநாயகம், சுருதி , சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்டுள்ள போலி மருந்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். முழு ஆய்வு மற்றும் விசாரணை முடிந்த பிறகே அதன் முழு மதிப்பு தெரியவரும். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராஜா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விவரங்கள் அனைத்தும் புதுச்சேரி சுகாதாரத்துறை செயலருக்கு தெரிவிக்கப்பட உள்ளது" என்றனர். மேலும், போலி மருந்துகள் புதுச்சேரியிலிருந்து நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் என். ரங்கசாமி எந்த முடிவும் எடுக்காததைக் கண்டித்து, “மக்களின் உயிரில் விளையாடும் முதல்வர் ரங்கசாமி அரசு” என்ற பதாகைகளை ஏந்தி, சி.பி.ஐ விசாரணை கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், “போலி மருந்து விவகாரத்தை மூடி மறைக்கும் முதல்வரே... பதில் எங்கே?” என்ற பேனர்களுடன், ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர் மாநிலம் முழுவதும் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மங்கலம் தொகுதிக்குட்பட்ட அரியூர் பகுதியில், தொகுதித் தலைவர் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 14 மன்றங்களின் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆளும் என்.ஆர். காங்கிரஸை கண்டித்தும், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதேபோல், நெல்லித்தோப்பு மற்றும் காமராஜ் நகர் தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜே.சி.எம். மக்கள் மன்ற நிர்வாகிகள், சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலி மாத்திரை தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக, சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த வாரம் சட்டமன்றம் அருகே ஜே.சி.எம். மக்கள் மன்றம் சார்பில் ஏற்கெனவே ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, போலி மருந்து விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவருக்குக் கடிதம் வழங்கப்பட்டது.
எனினும், இதுவரை முறையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இதைக் கண்டிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. சுதேசி மில் அருகே, ஜே.சி.எம். மக்கள் மன்றத் தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, "போலி மருந்து குறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்," "முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். மேலும், கைகளில் போலி மருந்துகள் குறித்து பதாகைகளை ஏந்தி நின்றனர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டங்கள் தொடரும் என ஜே.சி.எம். மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர்.

இந்த போலி மருந்துகள் எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது? யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விசாரணை தேவை என்ற கோரிக்கைகளும் எழும்பியுள்ளன. போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் புதுச்சேரி மாநிலத்தில் பூகம்பத்தை ஏற்படுத்திவருகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பூகம்பமாய் வெடித்த போலி மருந்து.. மாத்திரை தொழிற்சாலை விவகாரம்
வாய் திறக்காத முதலமைச்சர் அய்யோ... யாருக்கெல்லாம் ஆபத்து?!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies