BIG STORIES
மலைக்கும் போலீசுக்கும் ஆகாதோ..?.. ரவுடியை பிடிக்க போய் பரிதாபம்.. மலை குன்றில் சிக்கி தவித்த திக் திக்..!
Dec 05, 2025 04:13 PM
11
50 வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிப்பதற்கு மாறு வேடத்தில் விரட்டிச் சென்ற 5 போலீசார் கடையம் மலை உச்சியில் சிக்கிக் கொண்டனர். இருட்டில் வழி தெரியாமல் தவித்த போலீசாரை மீட்பதற்கு ராட்சத விளக்குகள் மூலம் வெளிச்சத்தை உருவாக்கி மீட்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழகத்தை கலக்கி வந்த தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகன் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பாலமுருகன் வழிப்பறி வழக்கில் சிக்கி போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்று கேரளாவில் பதுங்கிக் கொண்டார்.
இந்த நிலையில் கடையத்தில் அவரது மனைவியை பார்க்க வந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சுற்றிவளைத்தனர். போலீசாரின் கைகளில் சிக்காமல் எஸ்கேப்பான பாலமுருகன், அருகில் உள்ள மலைகுன்றில் ஏறி பதுங்கிக் கொண்டார்.
இதையடுத்து தென்காசி மாவட்ட சிறப்பு படை காவலர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் வியாழக்கிழமை மாலை ஆடு மேய்ப்பவர்கள் போல வேடமிட்டு சாதாரண உடையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியதையடுத்து சக்தி வாய்ந்த விளக்குகளை கொண்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கன மழை பெய்த மழையிலும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஒரு பாறையில் ஏறிய 5 காவலர்கள் மீண்டும் கீழே இறங்க முடியாமல் நீண்ட நேரமாக சிக்கித் தவித்தனர். அவர்கள் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள அந்த மலைகுன்றின் மத்தி பகுதியில் நீண்ட நேரம் சிக்கி தவித்தவர்களை மீட்க முடியாமல் , மலையடிவாரத்தில் உள்ள போலீசார் திணறினர்.
ஒரு கட்டத்தில் ரவுடியை தேடுவதை நிறுத்தி ஆபத்தில் சிக்கிய போலீசாரை மீட்கும் பணியில் போலீசார் கவனம் செலுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் இரவு நேரத்திலும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மலையில் இருந்து இறங்க இயலாமல் சிக்கி தவித்த போலீசாரை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்
இத்தனை களேபாரங்களுக்கும் நடுவே பாறையில் பதுங்கிய ரவுடி பாலமுருகன் போலீசிடம் சிக்காமல் தப்பிச்சென்று விட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu