BIG STORIES
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளால் உருவான பதற்றம்.. திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுப்பு
Dec 04, 2025 01:24 AM
337
உத்தரவை மதிக்காத அதிகாரிகளால் உருவான பதற்றம்
திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை எற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை விதித்து தீபம் ஏற்றவிடாமல் தடுத்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை .... முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் புன்னியஸ்தலம்..!
ஒவ்வொரு கார்த்திகை தீப திருநாளின் போதும் இந்த மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதை கடந்த 40 ஆண்டுகளாக இந்து சமய அற நிலையத்துறை செய்து வருகின்றது. ஆனால் அதற்கு முன்பாக மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், அதே பழைய நடைமுறைப்படி மீண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து முன்னணி அமைப்பின் இராம இரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அங்கு தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என்று மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாக குழு சார்பில் எதிர்த்து வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமி நாதன் நேரடியாக மலைக்கே சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்திருப்பதாக கூறி நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் வழக்கம் போல மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஏற்றினர்
இதனால் அங்கு காத்திருந்த இந்து முன்னணி அமைப்பினர் ஏமாற்றம் அடைந்தனர். தீபத்தூணில் தீபம் ஏற்றாத இந்து சமய அற நிலையத்துறையையும், தடுத்த போலீசாரையும் கண்டித்து இந்து முன்னனி அமைப்பினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்
போலீசாரின் தடைகளை உடைத்தெரிந்து மலை உச்சிக்கு ஓடிச்சென்றனர். இந்த தள்ளுமுள்ளுவால் இருதரப்பிலும் சிலர் காயம் அடைந்தனர்
போலீசார் இந்து முன்னனியினரை குண்டுக்கட்டாக தூக்கி வந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர் . இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை என்பது, நீதிபதி சுவாமி நாதன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சென்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுமாறு மனுதாரர் ராம. ரவிக்குமாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி. இந்துமுன்னணி குழுவினர் நீதிமன்றத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பதாக மாவட்ட ஆட்சிதலைவர் அறிவித்தார்.
60க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புபடை வீரர்களுடன் மலை உச்சிக்கு செல்ல வந்த ராம ரவிக்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர்களை மலை உச்சிக்கு செல்ல காவல்துறையினர் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற தீர்ப்பு குறித்து காவல்துறையினரிடம் எடுத்து கூறிய நிலையில் சமூக பதற்றத்தால் 144 தடை உத்தரவு இருப்பதை காரணம் காட்டியும் , இந்த தீர்ப்பு குறித்து அரசு தரப்பில் மேல் முறையீடு செய்து இருப்பதாகவும் கூறி மலைக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். நீண்ட நேரம் வாதாடியும் பிரயோசனமில்லை என்பதால் மலை அடிவாரத்தில் பூஜை செய்து புறப்பட்டார் ராம ரவிக்குமார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu