தமிழ்நாடு
“ஆட்டிடியூடு நாயகன்” மகன் செயலுக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் சேதுபதி என்ன நடந்தது?
Jul 04, 2025 08:59 AM
190
ஆட்டிடியூட்டால் ட்ரோல் செய்யப்படும் விஜய் சேதுபதியின் மகன் மகன் செயலுக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, கதாநயகனாக நடித்த முதல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து அப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் சூர்யா சேதுபதி வாயில் சுயிங்கம்மை மென்றபடி செய்த செயல்களை நெடிசன்கள் பலர் விமர்சித்தும், “ஆட்டிடியூடு நாயகன்” என்று ட்ரோல் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் அவரது தந்தையும், நடிகருமான விஜய்சேதுபதி தற்போது அதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..
நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி தன்னுடைய தந்தையோடு சேர்ந்து சிந்துபாத் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பிறகு கதாநாயகன் அவதாரம் எடுக்க வேண்டுமென முடிவு செய்த சூர்யா சேதுபதி அப்லி பப்லியாக இருந்த தனது உடலை வருத்தி கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஃபீனிக்ஸ் வீழான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவமான நடிப்பு மற்றும் சக நடிகர்களிடம் ஈகோ இல்லாமல் பழகும் குணம் ஆகியவற்றால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். எப்போதும் எளிமையாக இருக்கும் விஜய் சேதுபதி, தன் மீது வைக்கப்படும் கடும் விமர்சனங்களை கூட, அழகாக விளக்கம் அளித்து கடந்துசெல்ல கூடியவர். ஆனால் தனது தந்தை போன்ற ஒரு குணம் அவரது மகன் சூர்யாவுக்கு அமையவில்லை என்றும் அதனால் அவரது ஆட்டிடியூடுகளால் சமூக ஊடகங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறார் என்கின்றனர் திரை ரசிகர்கள்
தனது முதல் படமான ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷன் போது பேசிய சூர்யா, “என்னுடைய அப்பா வேறு, நான் வேறு என்று பேசியது இணையத்தில் வைரலாகின. இது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. அதனைத்தொடர்ந்து சூர்யா மனம் உடைந்து போய், தான் பேசியது தவறு என்று வருத்தம் தெரிவித்து இருந்தார்.
அதுபோல தன்னுடைய தந்தை தனக்கு ஒரு நாளைக்கு செலவுக்கு 500 ரூபாய் மட்டுமே பாக்கெட் மணியாக தருவார் என்று சூர்யா சொன்னதாக சில செய்திகள் பரவின. அதற்கு பலரும் எதிர்வினையாற்றினர். குறிப்பாக ”பலபேரின் தினசரி சம்பளமே! 500 ரூபாய் தான். அப்படி பார்த்தால், நீங்கள் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பாக்கெட் மணியாக பெறுகிறீர்கள். ஆனால் அது தான் பலரின் மாத சம்பளம். இதில் இருந்தே தெரிகிறது, கஷ்டம் என்பது என்னவென்று தெரியாமல் வளர்ந்திருக்கிறீர்கள் என்பது. உங்கப்பா தான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். நீங்கள் எளிதில் வந்துவிட்டீர்கள்!. அதனால் இனியும் இது போன்று பேசி அப்பாவின் பெயரை கெடுக்க வேண்டாம்” என தெரிவித்தனர். ஆனால் அப்படி தான் சொல்லவே இல்லை என சூர்யா அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இப்படி இந்த சம்பவங்கள் வந்து அடங்குவதற்குள், மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டர் சூர்யா. இந்த முறை அவர் ஏதும் பேசவில்லை. ஆனால் அவரின் செயல்கள் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பபுள்கம் சாப்பிட்டபடியே, சூர்யா தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து இருந்தார். அதுபோல சில ரசிகர்களிடம் ஏதோ ஆல் இண்டியா சூப்பர் ஸ்டார் போன்ற ஆக்டிவிட்டியுடன் சூர்யா சேதுபதி பேசிக் கொண்டிருந்தார். இதுவும் இணையத்தில் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் ட்ரோல் வீடியோக்களை நீக்குவதற்காக சூர்யா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாக சில புகார்களும் எழுந்தது. இது பற்றி இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பேசிய விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி "எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து, மிரட்டல் வந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்று பேசி இருந்தார். அதோடு தன்னுடைய மகனிடம், "மகனே பார்த்து பண்ணுடா" என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், மக்கள் செல்வனை, மக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டாரே அவரது மகன் என அவரது ரசிகர்கள் வருத்ததில் இருக்கின்றனர். மேலும் இவருடன் வனிதாவின் மகள் ஜோவிகாவையும் சேர்த்து இணைய வாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். “ஏன் நீங்கள் , ஆட்டிடியூடு ஆக்டர் சூர்யா சேதுபதியுடன் சேர்ந்து காதல் அழிவதில்லை 2 பண்ணக்கூடாது என்று கலாய்த்து வருகின்றனர்.
சூர்யா சேதுபதி நடித்த ஃபீனிக்ஸ் படம் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், அவர் தனது தந்தை போன்று, மக்களின் நன்மதிப்பை பெறுவாரா? அல்லது மீண்டும் ட்ரோல் மெட்டீரியலாக ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu