முகப்பு
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் எதிரொலி..காவல் உயரதிகாரிகளின் கீழுள்ள தனிப்படைகள் கலைப்பு
Jul 02, 2025 11:31 AM
34
காவல் உயரதிகாரிகளின் கீழுள்ள தனிப்படைகள் கலைப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமாரை டி.எஸ்.பியின் தனிப்படை போலீசார் அடித்துக் கொலை செய்ததைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.
அஜித்குமார் வழக்கில், காவல்துறை அதிகாரிகளின் கீழ் இயங்கும் தனிப்படைகள் குறித்து உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தமிழக அரசின் ஆலோசனையின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏதாவது குற்றம் நடைபெற்றால் அதில் துப்பு துலக்குவதற்காக மட்டுமே உரிய நடைமுறைகளை பின்பற்றி தனிப் படை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu