RECENT NEWS

100 ஆவது பிறந்த நாளைக் கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் கொண்டாடிய மூதாட்டி

இந்தியா

பெற்ற மகளை துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்ட குரூர தகப்பன்.! தேசிய டென்னிஸ் வீராங்கனை மரண பகீர்!

Jul 12, 2025 02:05 PM

257

பெற்ற மகளை துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்ட குரூர தகப்பன்.!

இந்திய ஆணாதிக்க மனப்பான்மையின் கோரத்தை அம்பலப்படுத்தி, தேசிய அளவில் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இப்படுகொலை சம்பவம். அதுவும், இப்படியொரு காரணத்துக்காக மனைவியின் பிறந்தநாளன்று, பெற்ற மகளையே, துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம், உலக மனசாட்சியை உலுக்கி எடுத்திருக்கிறது.  

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர், 25 வயது ராதிகா யாதவ். தேசிய அளவில் டென்னிஸ் விளையாடி, பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால், ஒரு போட்டியின் போது தோள்பட்டை காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் விளையாடுவதை நிறுத்திவிட்டு, டென்னிஸ் அகாடமியைத் தொடங்கியுள்ளார். அங்கு அவர் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துவந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பல்வேறு ரீல்ஸ்களையும் வெளியிட்டுவந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், “மகளின் வருமானத்தில் உயிர் வாழ்கிறாயா?” எனவும் ராதிகா குறித்தும் அப்பகுதி மக்கள் கேலி பேசியதாக கூறப்படுகிறது. இதனால், டென்னிஸ் அகாடமியை மூடிவிடும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார், தந்தை தீபக் யாதவ். ஆனாலும் தொடர்ந்து தன்னம்பிக்கையோடு டென்னிஸ் அகாடமியை நடத்திவந்துள்ளார், ராதிகா.

இந்தநிலையில்தான், ஜூலை 10 ஆம் தேதி வியாழக்கிழமை தனது தாயார் மஞ்சுவுக்கு பிறந்தநாள் என்பதால், முதல் மாடியில் உணவு பதார்த்தங்களை தயாரித்துக்கொண்டிருந்துள்ளார், ராதிகா. குறிப்பாக, தனது தாயாருக்கு பிடித்த ஸ்பெஷல் இனிப்பு வகைகளை செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தாயார் சோர்வாக இருந்ததால் படுக்கை அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்துள்ளார்.

அந்தநேரம், திடீரென துப்பாக்கியுடன் அறைக்குள் நுழைந்த தந்தை தீபக் யாதவ், குரூர வெறியோடு ராதிகாவை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். கண் மூடித்தனமாக அவர் சுட்ட ஐந்து தோட்டாக்களில் மூன்று தோட்டாக்கள் ராதிகாவின் உடம்பை துளைத்துள்ளது. துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளார், தீபக்.

இதனால், தரை தளத்தில் வசிக்கும் தீபக்கின் சகோதரர் குல்தீப் மற்றும் அவரது மகன் பியூஷ் ஆகியோர் துப்பாக்கிச் சத்தம் கேட்டு மாடிக்கு ஓடி வந்தனர். அப்போது, ​​ராதிகா சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனே, ராதிகாவை அருகிலுள்ள ஆசியா மரிங்கோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த டாக்டர்கள், ராதிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதுகுறித்து, தீபக்கின் சகோதரர் குல்தீப் மற்றும் அவரது மகன் பியூஷ் ஆகியோர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “அவர் இப்படி செய்வார் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு இப்படியொரு நோக்கம் இருக்கிறது என்பது அவரிடம் இதற்கு முன் வெளிப்படவே இல்லை” என்றும் கூறியுள்ளனர்.

ராதிகாவின் தாயார் மஞ்சு யாதவ், சம்பவம் நடந்த நேரத்தில் காய்ச்சல் காரணமாக தனது அறையில் படுத்திருந்ததாகவும், துப்பாக்கிச் சத்தம் மட்டுமே கேட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இப்படியொரு, கொலைக்கு என்ன காரணம் என்று தனக்குத் தெரியாது என்றும், தனது கணவனுக்கும் மகளுக்கும் இடையே எந்தப் பெரிய தகராறும் இருப்பதாகவும் தனக்குத் தெரியாது என்றும், ராதிகா நல்ல குணம் கொண்டவள் என்றும், குடும்பத்திற்கு ஒருபோதும் அவப்பெயரை ஏற்படுத்தவில்லை என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை நேரில் விசாரணைக்கு வந்தபோது, டிராயிங் ரூம் மேசையில் வெற்று குண்டுகள் மற்றும் ஒரு தோட்டாவுடன் ரிவால்வரைக் கண்டெடுத்தனர்.

ராதிகாவின் தந்தை தீபக் யாதவ்விடம் நடத்திய விசாரணையில் “உனது மகளின் வருமானத்தில் உயிர் வாழ்கிறாயா?” என ஊர்க்கார்கள் கேலி செய்ததாகவும் "அவமானம்" மற்றும் அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மகளை சுட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர், குற்றம் நடந்த இடத்தில் இருந்து இரத்த மாதிரிகள் மற்றும் துணியால் துடைக்கும் துணிகள் ஆகியவை ஆதாரமாக கைப்பற்றப்பட்டன. BNS பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராதிகா யாதவ்வின் தந்தை தீபக் யாதவை சிறையில் அடைத்தனர்.

ராதிகா யாதவ், ஒரு தேசிய அளவிலான டென்னிஸ் வீராங்கனையாக இருந்துள்ளார். ஆனால், விபத்து காரணமாக விளையாட்டிலிருந்து ஒதுங்கியவர், தான் கற்ற விளையாட்டை வருங்கால சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுத்து, அதன்மூலம் குடும்பத்திற்கு ஒரு வருமானத்தையும் ஈட்டியுள்ளார்.

பொழுதுபோக்கிற்காக, ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். அதாவது, பெண் பிள்ளைகள் சுயமாக முன்னேறுவதும் அதன்மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுவதையும் பெற்றோர்கள் பெருமையாக கருத ஆரம்பித்துவிட்ட காலம் இது. அப்படியிருக்க, “உன் மகளின் சம்பாத்தியத்தில் நீ உயிர் வாழ்கிறாய்” என கேலி செய்பவர்களின் பக்கம்தான், அவர் துப்பாக்கியை திருப்பியிருக்கவேண்டும் என்கிறார்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம்!.. Call Boy Job ரெடியா? கரும்பு தின்னக்  கூலி... தினம் தினம் ஜாலி... மாறிய Climax
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies