BIG STORIES
மாணவனை கடத்தி கொடூர சித்ரவதை 4 போதை பூச்சாண்டிகள்..! டாஸ்மாக் மதுவால் அட்டகாசம்
Jul 12, 2025 05:10 AM
207
மாணவனை கடத்தி கொடூர சித்ரவதை 4 போதை பூச்சாண்டிகள்..! டாஸ்மாக் மதுவால் அட்டகாசம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையில் லிப்ட் கேட்ட பள்ளி மாணவனை கடத்திச்சென்ற போதை இளைஞர்கள் அறையில் அடைத்து தாக்கி கொடுமைப்படுத்தி வீசிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருப்பூர் மாவட்டம் இச்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், இந்துமதி தம்பதியினர். வெங்கடேஷ் பைலர் வேலைக்கும், இந்துமதி வைண்டிங் வேலைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 15 வயதான சபரீ சொக்கம்பாளையம் அரசு காந்தி உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 9 ஆம் வகுப்பு படித்து வந்தவர் வெள்ளிக்கிழமை காலையில் வகுப்பறையில் இருந்து மாயமானவர்,
மாலை நேரத்தில் உடலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.
அவரை மீட்ட பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் அந்த சிறுவனை சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளிக்க செய்தார்.
விசாரணையில் சிறுவன் சபரியை 4 போதை இளைஞர்கள் கடத்திச்சென்று மது குடிக்க சொல்லி அடித்து சித்திரவதை செய்தது தெரியவந்தது.
பெற்றோர் கட்டாயப்படுத்தி விடுதியில் சேர்த்து விட்டதால், அங்கிருக்க பிடிக்காமல் சம்பவத்தன்று காலை பள்ளிக்கு கட் அடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார் மாணவர் சபரி.
சொக்கம்பாளையம் பள்ளிக்கு அருகே சாலையில் சென்றவர்களிடம் லிப்ட் கேட்டதாக கூறப்படுகின்றது.
அப்போது அந்த வழியாக இரு பைக்குகளில் வந்த நான்கு இளைஞர் களிடம் சபரீஷ் லிப்ட் கேட்டு கையை காட்டிய நிலையில் , சாமாளாபுரத்தில் இறக்கி விடுவதாக கூறி சபரீயை இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் ஏற்றி உள்ளனர்.
கருமத்தம்பட்டி பகுதியில் சோமனூரில் காலை 11 மணிக்கு சட்ட விரோதமாக செயல்பட்ட மதுபான கடையில் மது வாங்கி அருந்தி உள்ளனர்.
சிறுவன் சபரீயையும் குடிக்க சொல்ல அவன் மறுத்ததால் கடுமையாக தாக்கியுள்ளனர். குடிக்க மாட்டேன்னு சொன்னவுடன் கைக்குட்டையை சிறுவனின் முகத்தில் வைத்து மயங்க செய்துள்ளனர். அதன் பின்னர் சிறுவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.
கண்விழித்து பார்த்தால் சூலூர் அருகே காடாம்பாடி விஐபி நகர் பகுதியில் ஒதுக்குப்புறமான ஆளில்லா கட்டிடத்திற்கு கொண்டு சென்று மீண்டும் குடிக்க சொல்லி தாக்கியுள்ளனர்.
மறுத்து அடம்பிடித்த சிறுவனின் பின் மண்டையில் இரும்பு ராடால் அடித்ததாகவும் கூறப்படுகின்றது.
முகம் , காது வாய் , தலை முதுகு பகுதியில் பலமாக தாக்கியுள்ளனர். அங்கு அறை முழுவதும் ரத்தக்கரை படிந்துள்ளது மேலும் மது பாட்டில்கள் உடைந்த கண்ணாடி ஆகியவை அங்கே கிடந்தது. சம்பவ இடத்தை சூலூர் போலீசார் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் சபரியின் தாயார் இந்துமதி கூறும் போது, இனிமேல் எந்த குழந்தைக்கும் இதுபோல் நடக்கக்கூடாது. தயவு செய்து ஒயின்ஷாப்பை மூடுங்கள் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
முதற்கட்ட விசாரணையில் சிறுவனை மதுகுடிக்க வைத்து தவறான செயல்களில் ஈடுபட எண்ணி இருக்கலாம் என்றும், சிறுவன் ஒத்துழைக்க மறுத்ததால் மிருகத்தனமாக தாக்கியது தெரிய வந்துள்ளது.
சைக்கோ போல கொலை வெறியுடன் சிறுவனிடம் நடந்து கொண்ட 4 பூச்சாண்டி இளைஞர்களையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu