BIG STORIES
தாய், சகோதரியை காப்பாற்றி உயிரை விட்ட இளைஞர்.. ஒரு Prank Call- ஒரு கொலை..!
Jul 12, 2025 01:51 AM
256
தாய், சகோதரியை காப்பாற்றி உயிரை விட்ட இளைஞர்.. ஒரு Prank Call- ஒரு கொலை..!
நண்பனை பயமுறுத்துவதற்காக விளையாட்டாக செய்த ப்ராங்க் காலால் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து இளைஞர் குத்திக் கொல்லப்பட்ட பரிதாப சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விளையாட்டாக நினைத்த பிராங்க் கால் வினையாக முடிந்ததால் தாய் மற்றும் சகோதரி உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை இழந்த இளைஞர் அரசு தான் இவர்.
மதுரை மாவட்டம் கல்மேடு அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் 18 வயது அரசு. பள்ளி படிப்பை முடித்து விட்டு பெயிண்டராக வேலை செய்து வந்த அரசு, தனது பள்ளிக்கால தோழன் அழகுபாண்டியோடு நட்புடன் பழகி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் அரசு இருந்தபோது அவருக்கு ஒரு செல்ஃபோன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தான் போலீஸ் எனக் கூறி, காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கிடாக்கி சத்தத்தை மற்றொரு செல்ஃபோனிலிருந்து ஒலிக்க விட்டவாறு பேசியுள்ளார்.
பின்னர் அரசின் தாயாரிடம் செல்ஃபோனை கொடுக்கச் செய்து, மகனை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க, ரொம்ப சேட்டை செய்றான் கவனமா இருக்கச் சொல்லுங்க என பேசியுள்ளார். இதனை கேட்டு அரசும் அவரது குடும்பத்தினரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
சில நாட்கள் கழித்து போலீஸ் போல பேசியது அழகுபாண்டி தான் என மற்ற நண்பர்கள் மூலமாக அரசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அப்பகுதியினர் பேசி சமாதானப் படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அழகுபாண்டியின் அண்ணன் செல்லபாண்டியை அரசு முறைத்துப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால், நள்ளிரவில் கையில் கத்தியோடு அரசின் வீட்டிற்கு சென்ற செல்லபாண்டி, பூட்டியிருந்த கதவை எட்டி உதைத்துள்ளார்.
சத்தம் கேட்டு அரசின் தாயார் கதவை திறந்தபோது செல்லபாண்டி வேகமாக வீட்டிற்குள் புகுந்து அரசின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
பதறித்துடித்த அரசுவின் தாயாரும், தங்கையும் கூச்சலிட்ட படியே செல்லபாண்டியை தடுக்க முயன்ற போது அவர்களையும் கத்தியால் குத்த முயன்றுள்ளார். ஆனாலும், கத்திக்குத்து காயத்தோடு இருந்த அரசு, செல்லப்பாண்டியை தடுத்ததால் இருவரையும் விட்டு விட்டு அவர் தப்பி ஓடியுள்ளார்.
ஆனாலும், செல்லப்பாண்டியை துரத்தி பிடிப்பதற்காக ஓடிய அரசு அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த சிலைமான் போலீஸார், அரசு உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு செல்லபாண்டியை கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu