முகப்பு
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண் கொலை.. போலி சாமியார் உள்பட 4 பேரை கைது செய்த போலீஸார்
Jun 17, 2025 05:13 AM
118
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண் கொலை.. போலி சாமியார் உள்பட 4 பேரை கைது செய்த போலீஸார்
நெல்லை மாவட்டம் பழவூரில், காணாமல் போனதாக 8 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட நிலையில் உடல்பாகங்கள் மீட்கப்பட்டன.
மாடன்பிள்ளை தர்மத்தைச் சேர்ந்த கயல்விழி திருமணமான 2 ஆண்டிலேயே கணவரை பிரிந்ததால் சேர்த்து வைக்கக் கோரி குமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த சாமியார் சிவசாமியை நாடி உள்ளார்.
மாந்தீரிகம் செய்வதாகக் கூறி அதிக பணம் வாங்கியும் தம்பதியர் ஒன்று சேராததால், அவரை கயல்விழி அடிக்கடி செல்போனில் தொடர்புக் கொண்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
எனவே, சுசீந்திரத்திற்கு வரவழைத்து காரில் வைத்தே கழுத்தை நெறித்து கொன்று அவர் அணிந்த ஏழு சவரன் நகைகளை பறித்து விட்டு சடலத்தை களக்காட்டில் 80 அடி கால்வாயில் வீசியதாக கூறப்படுகிறது.
கயல்விழியின் செல்ஃபோன் கால் பதிவுகளை ஆய்வு செய்து சிவசாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu