RECENT NEWS

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும் “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு

Jul 19, 2025

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும் “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு

Jul 19, 2025

முகப்பு

பீர் பாட்டிலை வாயில் திணித்து +2 மாணவி கொலை..! இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்..

Jun 11, 2025 01:09 PM

563

பீர் பாட்டிலை வாயில் திணித்து +2 மாணவி கொலை..! இன்ஸ்டா பழக்கத்தால் விபரீதம்..

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா காலனியில் வசித்து வந்த 18 வயது. பிளஸ் டூ மாணவி ஜூன் 3 ஆம் தேதி முதல் காணாமல் போனார்.

பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், அனந்தபுரம் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நான்கு நாட்கள் கடந்த நிலையில் ஜூன் 7 ஆம் தேதி இரவு, கூடேரு மண்டலத்தில் உள்ள கோட்கூர் அருகே நெடுஞ்சாலை அருகில் முட்புதர்களில் பாதி எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாணவியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வாயில் பீர் பாட்டிலால் திணித்து கொடூரமாக கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்த போது அந்த சடலத்தின் கையில் கையில் இருந்த டாட்டூவை அடையாளமாக வைத்து தங்கள் மகள் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். தலையில் வலுவாக தாக்கி கொலை செய்யப்பட்டதை பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்தனர்.

கொலையாளிகளை கண்டறிய அனைத்து கோணங்களிலும் விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் மாணவியின் இன்ஸ்டாகிராம் சாட்டிங்குகளை ஆய்வு செய்தபோது அவர் அனந்தபுரம் நகரைச் சேர்ந்த நரேஷ் என்பவருடன் லவ் சாட்டிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நபரை பிடித்து விசாரித்த போது கொலைக்கான திடுக்கிடும் தகவல் வெளியானது.

மாணவியின் பெற்றோர் ராமகிருஷ்ணா நகரில் புதிய வீட்டைக் கட்டும் பணிக்கு ஃபோர்மேன் வேலை காக வந்தவர் தான் இந்த நரேஷ்.

அங்கு வேலை பார்த்த போது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சாட்டிங் செய்வதும் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த பழக்கம் ஒரு மாதமாக காதலாக மாறியதை போலீசார் கண்டறிந்தனர்.

காதல் ஜோடி வெளியிடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நரேஷ் நச்சரிக்க தொடங்கி இருக்கிறார்.

நரேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனதால் மீண்டும் திருமணம் செய்யமுடியாது என்று மாணவி மறுத்துள்ளார்.

இருப்பினும், மாணவிக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதால் அவரைத் திருமணம் செய்து கொள்வதில் நரேஷ் தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூன் 3 ஆம் தேதி மாணவியை கட்டாய திருமணம் செய்யும் திட்டத்துடன், அவுட்டிங் செல்லலாம் என ஏமாற்றி நரேஷ் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

செல்லும் வழியில் திருமணம் குறித்து மீண்டும் பேசியபோது, மறுப்பு தெரிவித்த மாணவி தன்னை வீட்டில் விட்டு விடும்படி சண்டையிட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியதாகவும், இதில் மாணவியை கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக நரேஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாணவி தலையில் பாறையால் வலுவாக தாக்கி, அவர் இறக்காமல் இருந்ததால், பீர் பாட்டிலால் தலையில் தாக்கி, கூச்சலிட்டு காட்டி கொடுத்து விடக்கூடாது என்பதற்காக வாயில் பீர் பாட்டிலை வலுக்கட்டாயமாக திணித்து மூச்சு திணறச் செய்து கொடூரமான முறையில் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், மாணவியின் உடலின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து, ஆதாரங்கள் கிடைக்காமல் அழிக்க முயன்று அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

நரேஷின் போன் அழைப்பு பதிவுகள், சிசிடிவி காட்சிகள், இன்ஸ்டாகிராம் உரையாடல்களை ஆய்வு செய்த போலீசார், அவற்றை ஆதாரமாகக் கொண்டு அவரை கைது செய்தனர்.

அவரது பைக், கொலையில் பயன்படுத்தப்பட்ட கல், பீர் பாட்டில் உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர்.

மாணவியின் பெற்றோர் புகார் அளித்த பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அனந்தபுரம் நகர இன்ஸ்பெக்டர் ராஜேந்திரநாத் யாதவை மாவட்ட எஸ்.பி. ஜெகதீஸ் இடைநீக்கம் செய்தார். குற்றவாளியை கைது செய்ததாகவும், சட்டப்படி தண்டனை அளிக்கப்படும் என்று அனந்தபுரம் எஸ்.பி. ஜெகதீஷ் தெரிவித்தார். மேலும், குற்றவாளியின் குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், நலத்திட்டங்களை நிறுத்தவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் வழக்கை விரைவில் முடித்து குற்றவாளிக்கு அதிகப்பட்ச தண்டனை விரைவில் கிடைக்க விரைவு நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வாதிடப்படும் என்றார்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies