RECENT NEWS

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

முகப்பு

வரும் வரலாறு பீர் சொல்லும்.. போதையில் தகராறு செய்ததாக அதிமுக கட்சி நிர்வாகி கைது..!

May 29, 2025 11:08 AM

369

வரும் வரலாறு பீர் சொல்லும்.. போதையில் தகராறு செய்ததாக அதிமுக கட்சி நிர்வாகி கைது..!

பாரில் பராக்கிரமம் காட்டிய ரவுடிகள்.. அதிமுக கட்சி நிர்வாகி கைது ஏன்..?

சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் இசிஆரில் தனியார் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த மே 22 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் lord of the drinks என்ற மதுபான பாரில் குடித்துக் கொண்டிருக்கும் போது, அருகே இருக்கையில் குடித்துக் கொண்டிருந்த செல்வா என்பவர் பாரில் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ராஜா, செல்வாவை பார்த்து அமைதியாக இரு எனக்கூற செல்வா கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாஸால் ராஜாவை தாக்கியதாக தெரிகிறது.இந்த சம்பவத்தால் அங்கு மது அருந்த வந்த பெண்கள் பலர் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதில் காயமடைந்த ராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பார் மேனேஜர் வெங்கட் அளித்த புகாரில் இரு தரப்பினர் மீதும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக முக்குலத்தோர் புலிப் படை இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான அஜய் வாண்டையார் மற்றும் சுனாமி சேதுபதி ஆகிய இருவரை சென்னை போலீசார் தேனியில் வைத்து கைது செய்தனர்.

குறிப்பாக மதுபான விடுதியில் தாக்கப்பட்ட ராஜா என்பவருக்கு ஆதரவாக அஜய் வாண்டையார் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதாக கைது செய்து, இருவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.

இந்த மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில் கணேஷ்குமார், பிரசாத், ஜானகிராம், நாகேந்திர சேதுபதி, அஜய் ரோகன், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து
ராஜா, பிரேம்குமார், தீபக் தனசேகர் ,ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு நட்சத்திர விடுதி ஒன்றில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக அஜய் வாண்டையார் சென்னை போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies