RECENT NEWS

பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்வு

முகப்பு

‘அவன் விதி என் கைலதான் முடியும்’ - சோனத்தின் அகங்காரம்... “அவன என்ன பண்ணப் போறேன் பாரு...!” - தாயிடம் சவால்

Jun 13, 2025 01:38 PM

105

‘அவன் விதி என் கைலதான் முடியும்’ - சோனத்தின் அகங்காரம்... “அவன என்ன பண்ணப் போறேன் பாரு...!” - தாயிடம் சவால்

சோனத்தின் அகங்காரம்... “அவன என்ன பண்ணப் போறேன் பாரு...!” - தாயிடம் சவால்

அவன் விதி என் கையில தான் முடியணும் என இருந்தால் என்ன பண்ணுறது என கெத்தாக தாயிடம் சவால் விட்ட சோனம். .

அவன் சாகவில்லை என்றால் நானே கீழே தள்ளி கொன்று விடுவேன் என காதலனிடம் பேசிய கொடூரம். .

நாள்தோறும் டிசைன் டிசைன் ஆன திருப்பங்களை கொண்டு வரும் மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் என்னதான் நடக்கிறது?

இந்த செய்தியில் பார்க்கலாம். ..

சிரபுஞ்சி. . தொடர்ந்து மழை பெய்யும் மலைக்காடு. . அந்த இடத்தில் ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி தவறி விழுந்து உயிரிழந்த செய்தியைக் கண்டார் சோனம்.

ஏற்கனவே பல நாட்களாக தனது மனதில் போட்டு வைத்த மர்டர் திட்டத்துக்கு இந்த செய்தியைப் பார்த்துத் தான் கிரைம் ஸ்பாட்டை தேர்வு செய்து இருக்கிறார்.

ஆனால், தனது புது கணவன் ராஜா ரகுவன்சியோ ஜிம்முக்கு எல்லாம் சென்று ஸ்ட்ராங்காக இருப்பதால் ஒருவேளை தன்னால் மலையிலிருந்து தள்ளி கொல்ல முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது? என்று யோசித்துத்தான் கூலிப்படையை ஏவி விட்டு, அவர்கள் கண்முன்னே தனது கணவன் துடிக்க துடிக்க சாவதை ரசித்துப் பார்த்து இருக்கிறார் சோனம் என்கின்றனர் போலீசார்


கொலை செய்ய திட்டமிட்டு வந்த சோனம் ஹிந்தியில் பேசுவதை அறிந்து நெருங்கிய டூரிஸ்ட் கைடு ட்ரக்கிங்குக்கு வழி காட்டுவதாக கூறியும் வேண்டாம் என்று மறுத்து சென்றிருக்கின்றனர். காடு மலை மேடு நிறைந்த கானகத்துக்குள் எப்படி தனியாக செல்ல துணிகின்றனர்? என்று ஆச்சரியம் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் வழக்கமாக சுற்றுலா பயணிகள் செல்லும் டபுள் டக்கர் மலைப்பாதையை விட்டு தனியே ஒரு ரூட்டில் சென்றதைக் கண்டிருக்கிறார்.

அவர்களைப் பின்தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக மூன்று பேர் சென்றதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த கொலை சம்பவத்தில் டிஜிட்டல் ஆதாரங்கள் கிடைக்கக்கூடாது என முதலில் யோசித்த சோனம், ஒரு கீ பேட் பட்டன் போனை வாங்கி கூலிப்படைக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் லைவ் லொகேஷன் அனுப்பி பின் தொடர வைக்க ஒரு ஆண்ட்ராய்டு போன் வேண்டும் என்பதையும் கருதி அதையும் வாங்கி கொடுத்திருக்கிறாராம்.

திருமணம் நடைபெற்ற 4 நாட்களில், கூலிப்படையாக நியமிக்கப்பட்ட விஷால், ஆனந்த், ஆகாஷ், ஆகியோர் ராஜா ரகுவன்சியை கொல்லா விட்டால், தானே போட்டோ எடுப்பதாககூறி மலையில் இருந்து தள்ளிக் கொன்று விடுவேன் என்றும் காதலன் ராஜிடம் சோனம் சேட்டிங் மூலம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வழக்கில் பல முக்கியத் தடயங்கள் சிக்கியிருக்கின்றன.

பின்னால் இருந்தபடி விஷாலும் முன்னாள் இருந்த படி மற்றொரு கொலையாளியும் அரிவாளால் வெட்டி, பின்னர் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் சடலத்தைத் தூக்கி வீசியது பிரேத பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.

கூலிப்படையைச் சேர்ந்த மூவரும் இந்தூரில் இருந்து ஷில்லாங்-க்கு யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க ரயில், பேருந்து, டாக்ஸி என பல வித போக்குவரத்தில் மாறி மாறி பயணித்து ஸ்பாட்டுக்கு சென்று இருக்கின்றனர்.

‘கொல்லுங்கடா அவன...’ என சோனம் கட்டளையிட இந்த படுகொலை அரங்கேறி இருப்பதாக கைதானவர்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கொலை முடிந்ததும் சோனம் டாக்ஸி பிடித்து மவுக்கடாக்கில் இருந்து சில்லாங்கிற்கு சென்று, சாலை வழியாக குவஹாத்தி சென்றதாக கூறப்படுகிறது.

ராஜா ரகுவரன்சியின் ரத்தம், சோனம் மற்றும் ஒரு கொலையாளியின் ரெயின்கோட்டில் தெளித்திருந்ததாகக் கூறி, அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் வாங்கிய கடையிலும் அதனை வந்து வாங்கியது இவர்கள் தானா? என கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ளனர் போலீசார்

அந்த ஆயுதத்தில் இருந்தும் ராஜா ரகுவன்சியின் உடமை மீதும் இருந்த கைரேகைகள் ஒத்துப் போகின்றதா ? என சோதனை செய்யப்பட்டது

கொலைக்கு பயன்படுத்திய போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

42 இடங்களில் சோனம், ராஜா ரகுவன்சி, குற்றவாளிகள் எனக் கருதப்படுவோர் ஆகியோர் சென்று வந்த சிசிடிவி ஃபூட்டேஜ்கள் கைப்பற்றப்பட்டன.

ஹோட்டல் உரிமையாளர்கள் அவர்கள் பதிவு செய்யும் போது வழங்கிய ஆதார் கார்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது

ஸ்கூட்டர் வாடகைக்கு எடுத்த கடை உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அவர்கள் பயன்படுத்திய ரயில், விமான டிக்கெட்டுகளும் சம்பவம் நடந்த டைம்லைனுடன் ஒப்பிடப்படுகிறது.

சம்பவத்தன்று அனைவரது செல்போனும் ஒரே லொக்கேஷனில் இருந்தது தெரியவந்துள்ளது.

அனைத்து தடயங்களும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தப்பிச்சென்ற சோணம் டாக்ஸி பிடித்துச் சென்று இந்தூரில் ஒரு ஃபிளாட்டில் தங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பேருந்து நிலையத்தில் இரு ஆண்களுடன் என்று பேசிக் கொண்டிருந்தததாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறி இருக்கின்றனர். பின், தனியாகப் பேருந்தில் ஏறி புறப்பட்ட சோனம், ராஜும் மற்ற இருவரும் அன்று இரவு கைதானதை அறிந்து கொண்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி காஸிபூரில் உள்ள தாபாவுக்கு சென்ற பின், தனது அண்ணணுக்கு 17 விநாடிகள் போனில் பேசி கண்ணீருடன் கடத்தல் நாடகம் போட்டிருக்கிறார்.

அப்போதே அவரது அண்ணன் சரண்டர் ஆகிவிடு எனக் கூறியது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் தனது காதலனாகச் கருதப்படும் ராஜின் வங்கிக் கணக்கில் இருந்தே சோனம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொண்டதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

அதோடு அந்த ராஜுடன் சோனம் மணிக்கணக்கில் சம்பவத்தன்றும் பேசிய கால் ரெக்கார்டுகள் முக்கிய தடயமாக கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, சோனம் தனது தாயிடம் ஏற்கனவே காதலை கூறியதாக ராஜா ரகுவரன்சியின் சகோதரர் குறிப்பிட்டிருக்கிறார்.

சோனத்தின் நெருங்கிய உறவினர் மூலம் வந்த தகவலின் படி சோனம் தனது தாயிடம் ராஜூடனான காதலைப் பற்றி கூறியதாகவும், ஆனால் ‘நீ எவனை வேணாலும் காதலித்துக் கொள். ஆனால் நாங்கள் சொல்லும் நம்ம ஜாதி பையன மட்டும் தான் கல்யாணம் பண்ணனும்’ என தாய் மிரட்டியதாகக் கூறியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த சோனம், ‘அப்படியா... சரி ... இந்தக் கல்யாணத்துக்கு அப்புறம் யாருக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பல்ல... என சூசகமாகக் கூறி இருக்கிறாராம்.

‘அந்த ஆளை என்ன செய்யப் போறேன் பாரு. . அதுக்கப்புறம் நடக்கப்போற பின்விளைவுகள் எல்லாம் நீ தான் ஃபேஸ் பண்ணி ஆகணும்’ என தாயிடம் மிரட்டல் விடுத்ததாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும், ஆனால் ராஜாவை கொல்லப் போகிறாள் என யூகிக்கவில்லை என்றும் ராஜா ரகுவன்சியின் அண்ணன் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாதி தானே தடையாக இருக்கிறது? ஒருவேளை விதவையாக இருந்தால் பின் வேறு வழியில்லை என்று ராஜை திருமணம் செய்து வைத்து விடுவார் என சோனம் திட்டமிட்டதாகவும் .. அதோடு சோனத்துக்கு இருந்த மாங்கல்ய தோஷத்தை தீர்க்க முதன்முதலாக தனது காதலன் ராஜை திருமணம் செய்தால் அவன் இறந்து விடுவானோ என்று அஞ்சி சோனம் தனது சகோதரனை பலிக்கடா ஆக்கிவிட்டதாகக் வேதனை தெரிவித்திருக்கிறார்.

நன்கு படித்த சோனம் வீட்டை விட்டு சினிமாவுக்கு கூட அனுப்பாமல் வளர்க்கபட்டவர் என்றும். . எம்பிஏ படிப்பதற்காக நுழைவுத் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருந்த சோனத்தை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

வரன் பார்க்கும் வேலையை ஆரம்பித்த பின், சிறை பறவையாக இருக்க முடியாது என்றுதான் பிளைவுட் ஃபேக்டரிக்கு சென்றதாகவும், அங்கு ராஜிடம் காதல் வயப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சோனத்தின் தாய்க்கு தகவல் தெரிந்திருந்தாலும் அவர் அவரது தந்தைக்கு சொல்லி இருந்தால் அப்போதே ராஜை வேலையில் இருந்து நீக்கி இருப்பார் என்றும் ஆனால் அவருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ரகுவன்சியின் சகோதரர் விபின் கூறியிருக்கிறார்.

திருமணமானது முதலே தனது மனைவி தன்னிடம் சரியாக பேசாமல் ஒரு மூலையில் அமர்ந்திருப்பதாகவும் எப்பொழுது பார்த்தாலும் மொபைல் ஃபோனையே பயன்படுத்தி வந்ததாகவும் அவரது நடவடிக்கை வருத்தம் தருவதாகவும் ராஜா ரகுவன்சி கூறி வந்ததாக அவரது சகோதரர் கூறி இருக்கிறார்.

தம்மை கொல்லத்தான் பணம் கேட்கிறாள் என அறியாத அப்பாவி என் தம்பி ராஜா ரகுவன்சி என்றும், ஹனிமூன் செலவுக்கு புது மனைவி பணம் கேட்கிறாள் என 9 லட்சம் ரூபாயை சோனத்தின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

காமாக்கியா தேவி கோவிலுக்கு சென்றபின், அங்கு கடவுளை வேண்டி விட்டு ஹனிமூனுக்கு மேகாலயா சென்றால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்று கதை அளந்து விட்டிருக்கிறார் சோனம். அதை உண்மை என நம்பி சந்தோஷமாக தாயிடம் கூறிவிட்டு சென்று இருக்கிறார் ராஜா ரகுவன்சி.

தனக்கும் கொலைக்கும் சம்பந்தமில்லை எனவும் தன்னை கொலை செய்ய அழைத்த போது தான் மேகாலயாவுக்கு செல்லவில்லை என்றும் ஆனால் கூலிப்படையை வைத்து சோனமே கொலை செய்து விட்டதாகவும் ராஜ் தரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, மேகாலயாவின் துணை முதலமைச்சர் மான நஷ்ட வழக்கு போடுவதாக எச்சரித்து இருக்கிறார்.

மேகங்கள் மிதக்கும் மிகவும் அழகிய மாநிலம் மேகாலயா. ஆனால் அங்கு ஹனிமூனுக்கு சென்ற ஜோடி காணாமல் போனதும் பின்பு கணவர் சடலமாக மீட்கப்பட்டதும் நகைகள் பறிபோனதும் அறிந்ததை எடுத்து தங்களுடைய மாநிலத்தின் நன்மதிப்பே போய்விட்டது.. இங்கு சுற்றுலாத் தொழிலை நம்பியவர்கள் கலங்கிவிட்டனர்.. என்று கூறியிருக்கிறார்.

ஊடகங்களும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களும் மேகாலயா போலீசாரையும் மேகாலயா சட்ட ஒழுங்கையும் மிகவும் அசிங்கப்படுத்தி விட்டதாக கூறிய அவர் கண்டிப்பாக அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போடுவோம் என்று கூறியதையடுத்து, தம்பியை இழந்த சோகத்தில் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ரகுவன்சியின் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து 3 நாட்கள், உணவு உறக்கம் தொலைத்து தேடி, எவிடன்ஸ் கலெக்ட் செய்து, ஐந்தே நாட்களில் குற்றவாளிகளை வெற்றிகரமாக கண்டுபிடித்த போலீசாருக்கு மேகாலயா துணை முதல்வர் வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு பொதுமக்களிடையயும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்திய வழக்காகியிருக்கிறது. விமான நிலையத்தில் ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை அழைத்து வரும்போது அங்கு பார்வையாளராக நின்று கொண்டிருந்த பயணி ஒருவர், குற்றவாளியை கன்னத்தில் அறைந்ததால் அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காதலை வீட்டில் சொல்ல தைரியமற்றவர் கொலைக்குத் துணிந்திருக்கிறார் என்றால் இதுபோன்ற முட்டாள் கோழைகளை நம்பி அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள் என கங்கனா ரனாவத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies