RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

இந்தியா

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

Jun 13, 2025 01:28 AM

1895

242 பேரில் ஒருவன்

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், விமானத்தில் பயணித்த இளைஞர் ஒருவரும், விமானத்தை தவற விட்டதால் இளம்பெண் ஒருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மேல் எழுந்து பறக்க தொடங்கிய சில வினாடிகளிலேயே தொழில் நுட்ப கோளாறால் கீழே விழுந்து மொத்தமாய் வெடித்துச் சிதறி இருக்கின்றது ஏர் இண்டியா நிறுவனத்தின் போயிங் ரக விமானம். விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் ஒருவர் கூட உயிர் தப்பி இருக்க வாய்ப்பு இல்லை என்று அகமதாபாத் போலீசார் அறிவித்தனர்.

மருத்துவ கல்லூரி விடுதி வளாகம் பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் போல சிதறிக்கிடந்த நிலையில் விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் தலை மட்டும் துண்டாகி சாலையில் கிடந்தது. இதனை பலரும் அதிர்ச்சியுடன் படம்பிடித்தனர்.

விமானத்தில் பயணித்தவர்கள் தீயில் கருகி அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிபோய் காணப்பட்டனர். குஜராத்தின் முன்னாள் முதல் அமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார். அவரை வழியனுப்பி வைத்த போது எடுக்கப்பட்ட வீடியோவே, அவரது கடைசி நிமிட காட்சிகளாக மாறிபோனது.

கேரளாவின் பத்தினம் திட்டாவில் இருந்து லண்டனுக்கு நர்சு வேலைக்கு செல்வதற்காக புறப்பட்ட ரஞ்சிதா கோபகுமரன் என்பவர் பலியானதால் அவரது இரு குழந்தைகளும் தாயை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

லண்டனில் குடும்பத்துடன் குடியேறும் திட்டத்துடன் பயணித்த ராஜஸ்தானை சேர்ந்த மென்பொறியாளரின் மொத்த குடும்பமும் பலியான சோகம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. லண்டனில் கடந்த 6 வருடமாக சிங்கிளாக வேலை பார்த்து வந்த மென்பொறியாளரான பிரதிக் ஜோஷிக் , இங்கு மருத்துவராக இருந்த மனைவி கோமி வியாஸ், 2 மகன்கள், ஒரு மகளை அழைத்துக் கொண்டு அங்கு குடியேற முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளை லண்டனில் செய்து வைத்து விட்டு, ஆசையாய் தனது குடும்பத்துடன் அந்த விமானத்தில் புறப்பட்டுச்சென்றார். பிரதிக் ஜோஷிக் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இப்படி பலரது வாழ்க்கை பயணத்தை இறுதி பயணமாக மாற்றிய இந்த விபத்தில், அரிதிலும் அரிதான நிகழ்வாக இளைஞர் ஒருவர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்த போது அவசரகால வழியை திறந்து கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பி இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஷ்வாஸ்குமார் ரமேஷ் என்பவர் தான் விமானத்தில் இருந்து கீழே குதித்தவர். 100 அடி உயரத்தில் இருந்து குதித்த நிலையில் மண்மேட்டில் விழுந்ததால் லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக அகமதாபாத் காவல்துறையினரிடம் ரமேஷ் தெரிவித்தார். தான் குதித்த இடத்திற்கு அருகே விமானம் வெடித்து ஏராளமான சடலங்கள் வந்து விழுந்ததால் பயந்து போய் எழுந்து ஓடியதாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அவரை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை போலவே கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் தாமதமாக விமான நிலையம் வந்ததால் விமானத்தை தவறவிட்ட பூமிகா சவுகான் என்ற இளம் பெண்ணும் இந்த கோர விபத்தில் சிக்காமல் தப்பி இருக்கிறார்.

இந்த விமான விபத்து பலரது வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருக்கின்றது. பலரது உடல்களை அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார் இரவு 10 மணி நிலவரப்படி 241 பேர் பலியானதாக தெரிவித்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி ரூபாயை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies