RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

BIG STORIES

”மலையூரு நாட்டாம.. மனச காட்டு பூட்டாம..” மொத்த நகையும் போச்சு.. ஆண்ட்ரியாவின் ஆசை அழைப்பால் அம்போ..!

Jun 11, 2025 02:05 AM

272

”மலையூரு நாட்டாம.. மனச காட்டு பூட்டாம..” மொத்த நகையும் போச்சு.. ஆண்ட்ரியாவின் ஆசை அழைப்பால் அம்போ..!

”மலையூரு நாட்டாம.. மனச காட்டு பூட்டாம..” மொத்த நகையும் போச்சு.. ஆண்ட்ரியாவின் ஆசை அழைப்பால் அம்போ..!

சென்னை காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தங்களை தொல்லை செய்யகூடாது என்று நீதிமன்றத்தில் தடையாணை பெற்று தலைநகரின் பல இடங்களில் மசாஜ் பார்லர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அங்கு சட்டவிரோத செயல்கள் ஏதும் நடக்கின்றதா ? என்று சாதாரணமாக ஆய்வுக்கு சென்றால் கூட போலீசார் மீது ஏதாவது ஒரு புகாரை சொல்லி சிக்கலில் மாட்டி விடுவதால் மசாஜ் பார்லர்கள் பக்கம் என்ன நடக்கின்றது என்று எட்டிப்பார்ப்பதற்கே போலீசார் அஞ்சும் நிலை உள்ளது. சிலர் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாருடன் தோழமையுடன் இருப்பதால் அப்படி.. இப்படி.. நடக்கின்ற ஒரு சில மேற்படி செயல்களை கண்டு கொள்ளாமல் விடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மசாஜ் பார்லருக்கு கழுத்திலும், கையிலும் நகை அணிந்து கொண்டு மலையூரு நாட்டமை போல சென்று வந்த தொழில் அதிபர் ஒருவருக்கு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. வெள்ளையா.. ரிச் கேர்ள் மாதிரி அழகான பொண்ணுக்கு ஆசைப்பட்டு சென்றவருக்கு நடந்தது என்ன ? விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் சார்லஸ், இளநீர் மொத்த வியாபாரம், மரம் அறுவை ஆலைகளுக்கு மரம் சப்ளை உள்ளிட்ட பல தொழில்களை செய்து வரும் இவர் எப்போதும் உடலில் அதிக நகைகளை அணிந்திருப்பார் என்று கூறப்படுகின்றது. 50 வயதான இவர் மசாஜ் செய்வதற்காக ஸ்பாக்களுக்கு செல்வது வழக்கம். அப்படி மசாஜ் செய்யும் சில பெண்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். அண்மையில் அவருக்கு பழக்கமான இளம்பெண் மூலம் வேறொரு பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

அந்த பெண்ணிடம் “மசாஜ் கிடைக்குமா..” என்று சார்லஸ் சபலத்துடன் கேட்க “தான் சொல்லும் இடத்துக்கு வாங்க சகலமும் கிடைக்கும்” என்று ஆசை தூண்டிலை வீசி உள்ளார் அந்த பெண். மேலும் "சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் உள்ள சர்வீஸ் அப்பார்ட் மெண்டுக்கு வாங்க.. " என அந்த இளம்பெண் அழைத்துள்ளார்.

இதனை நம்பி கடந்த 29ஆம்தேதி மாலை 3 மணி அளவில் சார்லஸ் அங்கு சென்றார். அறைக்குள் தான் ஆசைப்பட மாதிரியே வெள்ளையா ஒரு பொண்ணு நின்றதை பார்த்ததும், பெருச்சாளிக்கு பெரிய கருவாடு கிடைத்த மாதிரி அறையைத் தாழிட்டுக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி இருக்கிறார் சார்லஸ். அங்கிருந்த வெள்ளைக்கார பெண்ணை நெருங்கிய அடுத்த நொடி , அறையில் கிடந்த கட்டிலுக்கு அடியில் இருந்து இரண்டு நபர்கள் வெளியே வந்துள்ளனர். “யாருடா இந்த முரட்டு பசங்க?” என்று சார்லஸ் சுதாரிப்பதற்குள், அவர்கள் இருவரும் சேர்ந்து தொழிலதிபர் சார்லஸை கடுமையாக தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச்சங்கிலி, கையில் அணிந்திருந்த 10 சவரன் தங்க பிரேஸ்லெட் , 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகிவற்றை பறித்துள்ளனர்.

மேலும் கூகுள்பே மூலமாக சார்லஸ்ஸின் செல்போனில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்கள் கூகுள் பே கணக்கிற்கு மாற்றியுள்ளனர் . அவமானத்துக்கு பயந்து தொழில் அதிபர் சார்லஸும் இதனை வெளியே சொல்லமாட்டார் என்று நினைத்து அவரை மிரட்டி விரட்டி உள்ளனர். வீட்டிற்கு சென்று சில நாட்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி தவித்துள்ளார் சார்லஸ். ஒரு கட்டத்தில் நீங்கள் அணிந்திருந்த நகைகள் எங்கே என்று அவரது மனைவி கேட்ட உடன் சார்லஸ் தனக்கு நடந்தவற்றை மறைக்காமல் மனைவியிடம் தெரிவித்துள்ளார். தனது கணவருக்கு நம்பிக்கையூட்டிய அவரது மனைவி கணவரை போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து சார்லஸ் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது.

சார்லஸின் செல்போனில் இருந்த கூகுள் பே அக்கவுண்டில் இருந்து தனது அக்கவுண்ட்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றியதை வைத்து அந்த செல்போன் எண்ணுக்கு சொந்தகாரரான நவீன் என்பவரையும், ஆசை அழைப்பு விடுத்து சார்லஸுக்கு ஆப்பு வைத்த கோடம்பாக்கத்தை சேர்ந்த ரேகா என்ற 60 வயது பெண்மணியையும் தென்காசியில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

தோழி மூலம் அறிமுகமான சார்லஸ் நல்ல வசதியான நபர் என்பதால் அவரை அழைத்து பணம் பறிக்க திட்டமிட்ட ரேகா, சம்பவத்தன்று கூட்டளிகளான கோகுலகிருஷ்ணன் , ஆண்ட்ரியா தம்பதியுடன் இணைந்து தொழில் அதிபர் சார்லஸை வரவழைத்து மிரட்டி நகை பணத்தை பறித்தது தெரியவந்தது. அவசர உதவிக்கு 500 ரூபாய் கேட்ட பாவத்துக்கு 1000 ரூபாய் தருவதாக வீட்டிற்கு அழைத்து பேரன் நவீனையும் இந்த கொள்ளை சம்பவத்தில் சிக்க வைத்திருக்கிறார் பாட்டி ரேகா என்றனர் போலீசார் . ரேகா, நவீன் ஆகிய இருவரையும் கைது செய்து 2லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அதற்குள்ளாக சார்லஸிடம் பறித்த நகைகளை விற்று பணமாக்கி 4 பேரும் பகிர்ந்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் போலீசாரால் தேடப்படும் கோகுலகிருஷ்ணன் , ஆங்கிலோ இண்டியனான அவரது மனைவி ஆண்ட்ரியா ஆகிய இருவரும் இதனை ஒரு தொழிலாகவே செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். சபலபுத்திகொண்டவர்களை குறிவைத்து ஆண்ட்ரியாவின் கவர்ச்சியான புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி, ஆசை காட்டி தனிமையான இடத்திற்கு வரவழைத்து பணம்பறிப்பதை வாடிக்கையாக செய்து வருவதாக சுட்டிக்காடிய போலீசார், கோகுலகிருஷ்ணன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் இது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் சார்லஸின் மனைவி தனது கணவனுக்கு தைரியமூட்டியதால் அவர் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது போன்று நகையும் பணத்தையும் பறிகொடுத்து விட்டு அவமானத்துக்கு அஞ்சி , வெட்கப்பட்டு புகார் அளிக்காமல் இருப்பவர்கள் ஏராளம் என்று கூறும் போலீசார் , கூடுமானவரை இது போன்ற ஆசை அழைப்புகளை நம்பிச்செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், நகை விற்கின்ற விலையில் நாணயம்.. நம்பிக்கை.. எல்லாம் மலையேறி விட்டது. அதனால் யாரையும் நம்பிச்செல்வது சரியாக இருக்காது, வழிப்பறிகள் நிகழ நாமே வழிவக்குத்துக் கொடுத்துவிடக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர்.

ரிச் கேர்ள் கிடைக்கும் என்ற ஆசையில் சென்று தொழில் அதிபர் சார்லஸ் மொத்த நகையையும் பறிகொடுத்துவிட்டு அம்போவென நிற்கிறார். அவசர தேவைக்கு 500 ரூபாய் வாங்க சென்ற இடத்தில் , கூடுதலாக பணம் கிடைக்கிறது என்ற உடன் பேராசையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் “ஹனி டிராப்” ரேகாவுடன் சேர்ந்து, ஜவுளிக்கடை ஊழியர் நவீனும் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார். ஆதங்கத்தில் செய்தாலும்.. ஆசையில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!



SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies