RECENT NEWS

தோழியிடம் இருந்து வாங்கிய நகையை திருப்பித் தராத பெண் கைது

தோழியிடம் இருந்து வாங்கிய நகையை திருப்பித் தராத பெண் கைது

Jun 21, 2025

தோழியிடம் இருந்து வாங்கிய நகையை திருப்பித் தராத பெண் கைது

தோழியிடம் இருந்து வாங்கிய நகையை திருப்பித் தராத பெண் கைது

Jun 21, 2025

முகப்பு

கணவனை கார் ஏற்றி கொல்ல மனைவி மாஸ்டர் பிளான்.. காதலுக்கு சமாதி கட்டிய பயங்கரம்..!

May 21, 2025 01:31 AM

249

கணவனை கார் ஏற்றி கொல்ல மனைவி மாஸ்டர் பிளான்.. காதலுக்கு சமாதி கட்டிய பயங்கரம்..!

கணவனை கார் ஏற்றி கொல்ல மனைவி மாஸ்டர் பிளான்.. காதலுக்கு சமாதி கட்டிய பயங்கரம்..!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற போது, அதிவேக கார் மோதி அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக மனைவியின் காதலனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரத்தை சேர்ந்தவர் வேல்துரை. 43 வயதான இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்கிற உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் குடும்பத்தை பிரிந்து தனது காதல் மனைவியுடன் அடைக்கலப்பட்டணத்தில் உள்ள பைக் மெக்கானிக் சுதாகரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் திங்கட்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற வேல்துரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இண்டிகா கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஒட்டி வந்த நபரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு நபரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பாவூர்சத்திரம் போலீசார் உயிரிழந்த வேல்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் நம்பர் பிளேட் இல்லாததாலும், கார் விபத்து குறித்து எந்த ஒரு ஓட்டுனரும் காவல் நிலையத்தில் சரண் அடையாததாலும் விபத்து குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணையில் அந்த கார் அடைக்கலபட்டிணத்தை சேர்ந்த மெக்கானிக் சுதாகரிடம் இருந்ததும், சம்பவத்தன்று இந்த காரை ஆறுமுகம் என்பவர் ஒட்டி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டிச்சென்ற பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் மெக்கானிக் சுதாகரை வரவழைத்து விசாரித்தனர். தான் சாமி கும்பிடுவதற்காக சம்பவத்திற்கு முந்தைய நாளே திருச்செந்தூர் சென்று விட்டதாகவும், தனக்கு விபத்து குறித்து எந்த தகவலும் தெரியாது என்றும் கூறி, தான் முந்தின நாள் பயணித்த பேருந்து பயணச்சீட்டை போலீசாரிடம் காண்பித்தார். போலீசாரில் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் சொன்னது பொய் என்பதும், வேல்துரையின் மனைவி உமாவுடன் இருந்த தவறான உறவால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலை சம்பவம் அம்பலமானது.

2 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சுதாகரின் மனைவி இறந்து போனதாகவும், சுதாகரின் குழந்தைகளையும் உமா அரவணைத்து கவனித்து வந்ததாக சொல்லபடுகிறது. இதில் சுதாகருக்கும் உமாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. வேல்துரை வேலைக்கு சென்றவுடன் உமாவும், சுதாகரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இவர்களது நெருக்கம் வேல்துரைக்கு அரசல் புரசலாக தெரியவந்ததால் அவர், இனி சுதாகரின் குழந்தைகளையும் பார்க்க வேண்டாம், சுதாகருடனும் பேச வேண்டாம் என்று தடை போட்டுள்ளார். இதையடுத்து சுதாகருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.

பைக் மீது மோதுவதற்காக 2 மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு சென்று பழைய இண்டிகா காரை வாங்கி வந்து இரும்பு பம்பரை பொருத்தி உள்ளனர். வேல்துரை தனது பைக்கில் பாவூர்சத்திரம் சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறி பணிக்கு சென்று வருவதை நோட்டமிட்டுள்ளனர்.

திங்கள் கிழமை அதிகாலையில் பணிக்கு புறப்பட்டுச்சென்ற வேல்துரையை , திட்டமிட்டபடி காரில் பின் தொடர்ந்து சென்று அவர் மீது அதிவேகமாக காரை கொண்டு மோதியுள்ளனர். பைக்குடன் வேல்துரை இரும்பு மின் கம்பத்தில் சேர்த்து வைத்து மோதப்பட்டதால் அவரது தலை சிதறி பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய பாவூர்சத்திரம் போலீசார் மெக்கானிக் சுதாகர்,காரை ஓட்டி சென்ற ஆறுமுகம் , கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வேல்துரையின் காதல் மனைவி உமா ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணம் கடந்த காதலால் நிகழ்த்தப்பட்ட கொலையால் இரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் ஆதரவின்றி நிர்கதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நடிகையின் வாயை அடித்து கிழித்து கொடுமை படுத்திய விர்சுவல் வாரியர் விஷ்ணு..! குற்றப்பட்டியல் நீண்டதால் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies