BIG STORIES
மிஸ்டர் இண்டியா “மீஞ்சூர் மணி” 42 வயதில் உயிரிழப்பு.. பாடிபில்டரின் பரிதாப முடிவு
Jul 03, 2025 12:53 AM
2039
மிஸ்டர் இண்டியா “மீஞ்சூர் மணி” 42 வயதில் உயிரிழப்பு.. பாடிபில்டரின் பரிதாப முடிவு
மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பிரபல பாடி பில்டர் மீஞ்சூர் மணி வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது பாடி பில்டிங் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
ஒரு காலத்தில் மிஸ்டர் தமிழ் நாடா..? மிஸ்டர் இந்தியாவா? எதுவாக இருந்தாலும் கலந்து கொண்டு பட்டம் வென்ற பெருமைக்குரியவர் ஜிம் மாஸ்டர் மணிகண்டன்..!
இந்தியா முழுவதும் பல்வேறு ஆணழகன் போட்டியில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ள மணிகண்டன், சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு பிரியாணிகடை திறப்பு விழாவில் பங்கேற்ற மணிகண்டன் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதிகாலையில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவர் வாந்தி எடுத்ததாக கூறப்படுகின்றது. தொடர்ந்து மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து ,மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் , சில வருடங்களுக்கு முன்பு ஆணழகன் போட்டிக்கு தயாரான போது நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊசி மருந்தை அளவுக்கதிகமாக செலுத்திக் கொண்டதால் போட்டி நடந்த மேடையிலேயே தனது மகன் மயங்கி விழுந்ததாக அவரது தாய் தெரிவித்தார்
தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல் நிலை தேறினாலும் பழைய படி ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு உடல் முறுக்கேறவில்லை என்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுத்து வந்ததாகவும் தெரிவித்த மணிகணடனின் தாய், சில வருடங்களுக்கு முன்பு தனது மூத்த மகன் உயிரிழந்ததாகவும், தற்போது 2 வது மகன் மணிகண்டனையும் பறிகொடுத்து விட்டு கலங்கி நிற்பதாக வேதனை தெரிவித்தார்.
இது குறித்து விவரித்த அரசு மருத்துவர் ஒருவர், உடற்பயிற்சி மேற்கொள்வோர் சோர்வடையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யவும், உடலை உறுதியாக வைப்பதற்காகவும் முறுக்கேறிய நிலையில் காட்டுவதற்காகவும் ஒரு சில ஸ்டீராய்டு மருந்துகளை ஊசி மூலம் பயன்படுத்துவதாக கூறினர் அதில் அனபாலிக் என்ற ஊக்க மருந்து அவ்வப்போது பயன்படுத்தும் பாடி பில்டர்களை அதிகமாக பார்க்க முடிகின்றது. இதுபோன்று ஏதேனும் ஸ்டீராய்டு எடுக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் உடல் நிலை சீராக உள்ளதா ? என்பதை அறிய அவ்வப்போது ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கின்றனர் .
இந்த மருத்துகளை ஊசி மூலம் அதிகம் செலுத்திக் கொள்வதன் மூலம் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாகவும், ஏதோ ஒரு சில காரணங்களுக்காக உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் விட்டு விடுபவர்கள் கூட அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu