BIG STORIES
அஜீத்குமார் கொலை... யார் இந்த டாக்டர் நிகிதா ? வெளியான புதிய வீடியோ..! விசாரணையில் சிக்குவாரா ?
Jul 03, 2025 01:59 AM
462
அஜீத்குமார் கொலை... யார் இந்த டாக்டர் நிகிதா ? வெளியான புதிய வீடியோ..! விசாரணையில் சிக்குவாரா ?
திருப்புவனம் இளைஞர் அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது மதுரை திருமங்கலத்தை டாக்டர் நிகிதா அளித்த நகை திருட்டு புகார்.
அஜீத்குமார் உயிர்போகும் வரை தாக்கியும் நகை இருக்கும் இடம் தெரியாத நிலையில், உண்மையில் காரில் நகை இருந்ததா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் அவர் குறித்து அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் அப்படிப்பட்டவையாக உள்ளது . 3 திருமணங்கள் செய்தவர் என்றும் ஆனால் ஒருவருடனும் சேர்ந்து வாழாமல் தாயுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. நிகிதா போலீசில் தெரிவித்தது போல மருத்துவர் கிடையாது. பி.எச்.டி முடித்து அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக இருப்பதாக கூறப்படுகின்றது.
அதே போல நிகிதாவின் தாய் சிவகாமி, தந்தை ஜெயபெருமாள் ஆகிய இருவருமே அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். சகோதரர் கவியரசு, நிகிதா என குடும்பமே சேர்ந்து 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித்தருவதாக பல பேரிடம் 1 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்
பின்னர் ஆட்சி மாறியதை காரணம் காட்டி வேலையும் வாங்கிக்கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதோடு, இது குறித்து புகார் அளித்ததற்காக வழக்கறிஞர் ஒருவரால் பகிரங்கமாக மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தார் பணத்தை பறிகொடுத்த இளைஞர்
உறவினர்கள் ஐ.ஏ.எஸ்ஸாக இருப்பதாக கூறியதை நம்பி, 8 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கிக்கொடுத்து விட்டு, நிகிதாவின் கல்லூரி பிரின்சிபல் ஒருவர் இன்றுவரை அந்த பணத்தை திரும்ப வாங்க இயலாமல் கண்ணீரோடு தவித்து வருவதாக வேதனை தெரிவித்தார்
அனைவரிடமும் 500 ரூபாய் பணமாகவே வேண்டும் என்று கேட்டு பெற்றதாகவும், பணமாக கையில் கொடுத்ததால் , ஆதாரம் ஏதுவுமில்லை என்று கூறி விரட்டியதாக ஏமாந்தவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான முதல் தகவல் அறிக்கையில் நிகிதா அவரது தாய் சிவகாமி, தந்தை ஜெயபெருமாள், சகோதரர் கவியரசு என மொத்த குடும்பத்தின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையே அஜீத்குமார் உயிரிழந்த விவகாரம் வெளியானதும் , கடந்த 3 தினங்களுக்கு முன்பே வீட்டை பூட்டி விட்டு நிகிதா தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அன்று கோவிலில் நடந்தது என்ன என்று, தனது திருமுகத்தை காண்பித்து நிகிதா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது
அதில் அஜீத்குமார் 500 ரூபாய் கேட்டதால் உண்டான வாக்குவாதத்தை மறைத்து, கார் சாவியை எங்கு ? எப்படி யார் யாரிடம் ? எல்லாம் கொடுத்து வாங்கப்பட்டது என்பதை நிகிதா தெரிவித்துள்ளார்.
கார் சாவி அஜீத்குமாரிடம் மட்டுமல்லாமல் மேலும் சிலரிடமும் சென்று வந்தது நிகிதாவின் புதிய வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. அப்படி இருக்கையில் அஜீத்குமாரை மட்டும் டார்க்கெட் செய்து தாக்கியது ஏன் ? என்பது
நிகிதாவை பிடித்து விசாரித்தால் மட்டுமே தெரியவரும்..!
விசாரணை அதிகாரி நிகிதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இந்த நகை திருட்டு சம்பவத்தின் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பணத்துக்காக செய்தாலும், பவரை காட்ட செய்தாலும்... குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu