RECENT NEWS

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

Jul 13, 2025

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

கோவில் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலம்

Jul 13, 2025

BIG STORIES

வயதை மறைத்து திருமணம் டார்ச்சர் - 4 வது நாளிலேயே புதுப்பெண் விபரீத முடிவு..!

Jul 02, 2025 01:22 AM

418

வயதை மறைத்து திருமணம் டார்ச்சர் - 4 வது நாளிலேயே 
புதுப்பெண் விபரீத முடிவு..!

வயதை மறைத்து திருமணம் டார்ச்சர் - 4 வது நாளிலேயே புதுப்பெண் விபரீத முடிவு..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வயதை மறைத்து திருமணம் செய்ததோடு ஒரு சவரன் நகையை கூடுதலாக கேட்டு டார்ச்சர் செய்ததால் திருமணமான 4 வது நாளிலேயே புதுப்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி . பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

மறுவீட்டுக்காக திங்கட்கிழமை தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி அன்று இரவு வீட்டின் கழிவறைக்குள் சென்றவர் வெளியே வரவில்லை. நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் தூக்கிட்ட நிலையில் இருந்த அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து லோகேஸ்வரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. பொன்னேரி காவல்துறையினர் லோகேஸ்வரின் குடும்பத்தினரிடமும், கணவர் பன்னீர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் 4 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டது தெரியவந்தது. திருமணத்துக்கு முன்பாக மாப்பிள்ளை வீட்டார் 10 சவரன் வரதட்சனை கேட்டு, 5 சவரன் கொடுப்பதாக பெண் வீட்டார் ஒப்புக்கொண்ட நிலையில் 4 சவரன் நகை மட்டுமே வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் நகை வரதட்சணையாக கொண்டு வந்ததாகவும் பாக்கியுள்ள 1 சவரன் நகையை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மறுவீட்டுக்காக திங்கட்கிழமை தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்து அழுதுள்ளார். மேலும் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், காலை எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், சோபாவில அமர கூடாது என்றெல்லாம் கூறி மாமியார் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியதாக கூறி உள்ளார். வீட்டுக்குகாரர் நம்மிடம் 34 வயது என்று பொய் செல்லி விட்டதாகவும் அவருக்கு 37 வயது ஆகிறது, தங்கள் இருவருக்கும் 13 வயது வித்தியாசம் என்றும் தாய் மற்றும் தங்கையிடம் கூறி அழுதுள்ளார் லோகேஸ்வரி

பெரிய மருமகள் அதிக நகைக் கொண்டு வந்ததையும், பாக்கி 1 சவரன் நகையை வாங்கி வருமாறும், வீட்டிற்கு ஏசி ஒன்றை வாங்கி கொடுக்குமாறும் தொந்தரவு செய்ததாகவும் கூறியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இளம் பெண்ணின் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பொன்னேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் பன்னீர் , மாமியார் பூங்கோதை ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மாமனார் ஏழுமலை, நாத்தனார் நதியா ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

குடும்பமா? நாடா? வம்பிழுக்கிறாரா கம்பீர் ? கோலிக்கு  ஆதரவாக களமிறங்கிய 'சின்ன தல'
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies