முகப்பு
"வந்துட்டான்.. வந்துட்டான்...." லாரி கடத்தல்காரனை பிடிக்க சினிமா பாணியில் சேசிங்..! லாரியில் தொங்கிய டிராபிக் போலீஸ்
May 21, 2025 01:25 AM
197
லாரி கடத்தல்காரனை பிடிக்க சினிமா பாணியில் சேசிங்..! லாரியில் தொங்கிய டிராபிக் போலீஸ்
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த 16 சக்கரம் கொண்ட டாரஸ் லாரியை ஜல்லி லோடுடன் கடத்திச்சென்ற ஆசாமியை சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து போலீசார் விரட்டிச்சென்று பொதுமக்கள் துணையுடன் மடக்கிப்பிடித்தனர்....
சினிமா சேஷிங் செய்யும் காட்சிகளையே மிஞ்சும் வகையில் , ஜல்லி லோடு ஏற்றப்பட்ட லாரியை கடத்திச்சென்று செங்கல்பட்டில் இருந்து மறைமலை நகர் வரையில் போலீசாருக்கு போக்கு காட்டிய பரபரப்பான காட்சிகள் தான் இவை..!
திருக்கழுகுன்றத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் KAD என்று உதய சூரியன் சின்னம் வரையப்பட்டிருந்த 16 வீல் டாரஸ் லாரியில் ஜல்லி லோடு ஏற்றிக் கொண்டு கோவூர் நோக்கிச்சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே பாஸ்ட்ராக் வேலை செய்ய வில்லை என்று லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு , அதில் இருந்து இறங்கிச்சென்று சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் அந்த லாரியில் ஏறி அதனை கடத்திச்சென்றார்.
ஓட்டுனர் கமலக்கண்ணன் கூச்சலிட்டதால் அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீசார் மற்றும் சுங்கசாவடி ஊழியர்கள் லாரியை மடக்க முயன்றனர் முடியவில்லை.
போலீஸ்காரர் பக்கவாட்டு கம்பியை பிடித்தபடி லாரியின் முன்பக்கம் நின்றபடி செல்ல , மற்ற போலீசாரும் பொதுமக்களும் இரு சக்கரவாகனத்தில் அந்த லாரியை விரட்டிச்சென்றனர்
மகேந்திரா சிட்டி சிக்னல் அருகே ஒரு கட்டத்தில் அந்த லாரியை முந்திச்சென்ற போலீசார் ஈச்சர் வேன் ஒன்றை சாலையின் குறுக்கே நிறுத்த செய்து லாரியை மடக்க முயன்றனர். அங்கு லாரியை நிறுத்தாத கடத்தல் ஆசாமி , சிறிய இடைவேளி வழியாக லாவகமாக வளைத்து ஓட்டிச்சென்று விட்டார்
சாலையில் ஜல்லிகள் சிதறிய நிலையில் அதிர்ஷடவசமாக , சாலையில் நின்ற எந்த ஒரு வாகனத்தின் மீதும் மோதவில்லை.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரியின் வேகம் குறைந்ததால் போக்குவரத்து காவலர் முருகன் என்பவர் லாரியில் ஏறி லாரியை நிறுத்துமாறு கூறினர். ஆனால் லாரியை நிறுத்த மறுத்து லாரியை தொடர்ந்து வேகமாக இயக்கிச்சென்றார்
தொடர்ந்து சென்ற லாரியை போலீசார் மடக்க முயற்சித்தனர், லாரியின் வேகம் குறைந்த போது காவலர் முருகன் இறங்கி விட்டார்
அதற்குள்ளாக மறைமலை நகர் சிக்னலில் முன்னாள் நின்ற வாகனங்களை வைத்து லாரியை மடக்க போலீசார் முயன்றனர். இருந்தாலும் அடங்க மறுத்த கடத்தல் ஆசாமி சர்வீஸ் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் உள்ள கம்பிகளின் மீது மோதினான். இதனால் அந்த டாரஸ் லாரி மேற்கொண்டு செல்ல இயலாமல் சிக்கிக் கொண்டு நின்றது
அதன் பின்னரும் லாரியை விட்டு இறங்க மறுத்த அந்த அரைபாடி அர்னால்டு லாரிக்குள் ஏறுபவர்களை இரும்பு கம்பியால் தாக்க தொடங்கினான்
அவனை வெளியேற்ற வழி தெரியாமல் போலீசார் தவித்த நிலையில் பொங்கி எழுந்த பொதுமக்களின் சிலர் ஆவேசமாக லாரிக்குள் புகுந்து அந்த ஆசாமியை அடித்து உதைத்து லாரியில் இருந்து வெளியே தூக்கிப்போட்டனர்
வெளியில் நின்றவர்களும் அவரை தாக்க முயன்றனர், போலீசார் மீட்டு அந்த நபரை விசாரித்த போது அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டதால் அவரை சாலையோரம் அமர வைத்தனர். அந்த நபர் “தன்னை அடித்து விட்டனர்” என்று அழுது கொண்டிருந்தார்.
நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தின் ஓட்டுனர் கூறும் போது, லாரியை கடத்திச்சென்றவர் திருநெல்வேலியை சேர்ந்த அந்த ஆசாமி டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக இருந்ததாகவும், தனது செல்போனை பறிகொடுத்த பின்னர் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் அவரை பணியில் இருந்து டிராவல்ஸ் நிறுவனம் நீக்கியதாக கூறப்படுகின்றது. கடந்த ஒருவாரமாக இடுப்பில் சீசன் துண்டை கட்டிக் கொண்டு செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அங்குமிங்கும் வலம் வந்த நிலையில் இந்த லாரி கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவித்தார்
அதே நேரத்தில் போலீசார் கூறும் போது , கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ் செங்கல்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் கடந்த இரு தினங்களாக வழிபறி, கோயிலில் புகுந்து திருடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் , அவர் உண்மையிலேயே மன நலம் பாதிக்கப்பட்டவரா ? அல்லது பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறாரா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். இதற்க்கிடையே இரு தினங்களுக்கு முன்பாக சுங்கச்சாவடி அருகே உள்ள கடையில் பால் குடித்து விட்டு பணம் கொடுக்காமல் வம்பு செய்த சுபாஷுக்கு பெண் ஒருவர் கும்மாங்குத்து விட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.
மருத்துவ பரிசோதனைக்காக சுபாஷை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu