முகப்பு
பச்சைக்கிளி முத்துச்சரம் போல.. IT ஊழியரிடம் ஹனி ட்ராப்... நிர்வாணப்படுத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்!
Apr 25, 2025 03:26 PM
558
நிர்வாணப்படுத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்..!
பச்சைக்கிளி முத்துச்சரம் படம் போல, ஐடி ஊழியரிடம் ஹனி ட்ராப் செய்து, லட்ஜிற்கு வரவழைத்து,10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த கோயில் அர்ச்சகரின் 22 வயது இளைஞர் ஒருவர். இவர் லாஸ் பேட்டை ஈசியார் சாலையில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். தனது பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுத்து உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்வதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டுவந்திருக்கிறார்.
இந்த நிலையில், இளைஞரின் மொபைல் எண்ணிற்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ஒரு இளம்பெண் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ராங் கால் என கூறி, ஐ.டி. ஊழியர் அந்த இணைப்பை துண்டித்திருக்கிறார். பின்னர் மீண்டும் ஐ.டி., ஊழியரை தொடர்பு கொண்ட அந்த இளம்பெண், கொஞ்சும் மொழியில் பேசியிருக்கிறார்.
இளம்பெண்ணின் பேச்சில் மயங்கிய அவர், அந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை சந்திக்க வருமாறு அந்த பெண் கேட்டதற்கு இணங்க, கடந்த சில நாட்களுக்கு முன், புதுச்சேரி இந்திரா சதுக்கம் அருகே இருவரும் சந்தித்து பேசியிருக்கின்றனர். பின்னர், அந்த பெண் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பெரியமுதலியார் சாவடி கடற்கரை அருகே பழையபட்டின சாலையில் உள்ள லாட்ஜுக்கு ஐ.டி., ஊழியர் அழைத்து சென்றுள்ளார்.
அறைக்கு சென்றஉடன் கதவை மூடிய இளம்பெண், ஐடி ஊழியரின் ஆடையை கழற்றி நிர்வாணப்படுத்திருக்கிறார். அப்போது, பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்பட பாணியில், திடீரென அந்த அறைக்குள் ஒரு கும்பல் நுழைந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர், திகைப்படைந்தார். அதைத்தொடர்ந்து, எங்கள் உறவுக்கார பெண்ணை டார்ஜ் கூட்டிவந்து பாலியல் வன்கொடுமை செய்ய பார்கிறாயா? என கேட்டு, ஐ.டி., ஊழியரை மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை வெளியிடுதாக கூறி, ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டி, கழுத்தில் கத்தியால் கீறியிருகின்றனர். அப்போது மிகவும் கேஷுவலாக வந்த அந்த இளம்பெண், கேட்ட பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டிருக்கிறார்.. அப்போதுதான் தான் ஹனி ட்ராப்பில் மாட்டியிருப்பது அந்த ஐடி ஊழியருக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தான் வீட்டில் பணம் இருப்பதாகவும், தான் சென்று பணம் எடுத்துவருவதாக கூறியிருக்கிறார். அப்போது அவரின் விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2 லட்சம் மதிப்புடைய பைக்கை அந்த கும்பல் பறித்துகொண்டு, பணத்தை விரைவில் கொடுக்கவில்லை என்றால், சமூக வலைத்தளத்தில் நிர்வாண புகைப்படம் பதிவேற்றப்படும் என எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர்.
பின்னர் வேறொரு பைக்கில் அவரை அவரின் வீடு அருகே அழைத்துசென்ற அவர்கள், பணம் எடுக்க சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததால், சந்தேகமடைந்த கும்பல் அந்த லாட்ஜை விட்டு தப்பிச் சென்றது.
இது குறித்து ஐ.டி., ஊழியர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த லாட்ஜிக்கு சென்று, லாட்ஜை குத்தகை எடுத்து நடத்தி வந்த மூலக்குளத்தை சேர்ந்த ஜெர்மின் ஆல்வின் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, மிரட்டி பணம் பறிக்கும் கும்பலில் ஜெர்மின் ஆல்வினும் ஒருவராக செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பிரதீப் (எ) சுகன் தலைமையில், திருநாவுக்கரசு, மோகனபிரசாத், சுனில், ஆகிய நான்கு பேரும், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மூலம், ஐ.டி., ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இளம்பெண் மற்றும் பிரதீப் சுகன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu