முகப்பு
இருட்டுக் கடைக்காக மிரட்டினாரா மாப்பிள்ளை.. பின்னணியில் நடந்தது என்ன..? செல்போன் பேச்சால் உருவான சிக்கல்
Apr 17, 2025 01:01 AM
519
இருட்டுக் கடைக்காக மிரட்டினாரா மாப்பிள்ளை.. பின்னணியில் நடந்தது என்ன..?
நெல்லையில் பிரபலமான இருட்டுக்கடையை வரதட்சனையாக எழுதி கேட்பதாக மருமகன் மீது அல்வாக் கடை உரிமையாளர் நெல்லை காவல் ஆனையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் , தங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக மாப்பிள்ளையின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை டவுனில் உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியினரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா . இவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த உறவினர் மகன் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது
திருமணம் ஆகி ஒரு மாத காலம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கனிஷ்கா தாய் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார். இந்த நிலையில் தன் மகளை வரதட்சனை கேட்டு அவரது கணவர் பல்ராம் சிங் கொடுமைப்படுத்தியதாக , கவிதா ஹரிசிங் ,நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அதில் மாப்பிள்ளை குடும்பத்தினர் தனது மகளிடம் கூடுதல் வரதட்சனை வேண்டும் என்றும் விலை உயர்ந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள டிபென்டர் கார் ஒன்றை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது மகளின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார் அந்த பெண்ணையும் என் மகள் இருக்கும் போது வீட்டிற்கே அழைத்து வந்து குடித்தனம் நடத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து உன் தாயாரிடம் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என் மகளின் கணவர் பலராம் சிங் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 15 ம் தேதி தனது மகள் கடும் மன வேதனையுடன் கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கவிதா ஹரிசிங் தெரிவித்தார்
மறுநாளே தனது வீட்டுக்கு வந்த மகளின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனையோடு இருட்டுக்கடை அல்வா உரிமைத்தையும் தங்கள் பெயரில் எழுதித்தர வேண்டும் என மாப்பிள்ளை மிரட்டினர் என்றும் கூறினார்
தனது மகளின் மாமனார் யுவராஜ் சிங், பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு மிக்க நபருடன் தொடர்பில் இருப்பதாகவும் எங்கு சென்று புகார் அளித்தாலும் அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்தார் கவிதா ஹரிசிங்
இந்த நிலையில் இருட்டுக்கடை அல்வா குடும்பத்தில் பெண் எடுத்த மாப்பிள்ளை குடும்பத்தினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். தனது வீட்டில் வண்டி வாகனங்களுக்கு பஞ்சமில்லை என்றும் தனது வெளி நாட்டு பைக்கின் மதிப்புக்கு கூட இருட்டுக்கடை அல்வா கடை ஈடாகுமா ? என்று பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜ்சிங் கேள்வி எழுப்பினார்.
தனது மகனுக்கு டிபெண்டர் கார் தன்னுடைய பணத்தில் முன்பதிவு செய்ததாக தெரிவித்த அவர், தனது மருமகள் இரவு நேரத்தில் செல்போனில் யாரோ ஒருவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அதனை தட்டி கேட்டதால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக் சென்று விட்டதாகவும், தங்கள் மீது பொய்யான வரதட்சனை புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் யுவராஜ் சிங்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu