IPL போட்டிகள் நடத்தப்படுமா..?

0 3836

கொரோனா எதிரொலியாக தள்ளிவைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல்.போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படுமா என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு, ஐ.பி.எல்.லுக்கு வீரர்களை தேர்வு செய்யும் ஏல நடைமுறையை  ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ,பி,எல், அணி உரிமையாளர்கள், முக்கிய வீரர்களை தக்கவைத்து, அடுத்த ஆண்டு ஐ.பி.எல்,லில் அவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிரிக்கெட் மைதானத்தில் சமூக விலகியிருத்தலை உறுதி செய்வது இயலாத காரியம் என்பதால் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ரத்தாவது உறுதி எனவும் கூறப்படுகிறது. கொரோனாவால் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் மற்றும் யூரோ 2020 போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments