RECENT NEWS

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... தீயணைப்பு வீரர் போக்சோவில் கைது

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... தீயணைப்பு வீரர் போக்சோவில் கைது

Jan 30, 2026

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... தீயணைப்பு வீரர் போக்சோவில் கைது

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... தீயணைப்பு வீரர் போக்சோவில் கைது

Jan 30, 2026

உலகம்

நாய்க்காக இவ்வளவு தியாகமா? படம் பார்த்த மாதிரி இருக்கேப்பா..! மனதை உருக்கிய தம்பதியின் கதை

Jan 30, 2026 03:49 AM

13

நாய்க்காக இவ்வளவு தியாகமா? படம் பார்த்த மாதிரி இருக்கேப்பா..!
மனதை உருக்கிய தம்பதியின் கதை

நாய்க்காக இவ்வளவு தியாகமா? படம் பார்த்த மாதிரி இருக்கேப்பா..!

வீட்டில் வளர்த்த நாய்க்காக, இந்தியாவை சேர்ந்த தம்பதியினர் செய்த தியாகம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை பார்த்த பலரும், "இதை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாமே" என பூரிப்போடு தெரிவித்து வருகின்றனர். அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் ஜான், திவ்யா தம்பதியினர். இவர்கள் வீட்டில் 'ஸ்கை' என்ற செல்லப்பிராணியை வளர்த்து வந்துள்ளனர். அந்த தம்பதியினர் ஆஸ்திரேலியாவிற்கு தங்களது செல்லப்பிராணியையும் அழைத்து சென்று அங்கேயே குடிபெயர முடிவு செய்துள்ளனர். ஆனால், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்குள் நேரடியாக செல்லப்பிராணிகளை எடுத்து செல்ல முடியாது என்பது அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது.

உயிருக்கு உயிராக வளர்த்த செல்லப்பிராணியை எப்படி பிரிந்து செல்ல முடியும் என யோசித்த அந்த தம்பதியினர், தங்களது செல்லப்பிராணியையும் ஆஸ்திரேலியா அழைத்து செல்ல வேறு என்ன வழி உள்ளது என தேட ஆரம்பித்தனர்.

இந்தியாவில் இருந்து வரும் செல்லப்பிராணி மூலம் தங்களது நாட்டில் ரேபிஸ் நோய் பரவக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு கட்டுப்பாடு உள்ளது. அதாவது ஆறு மாதங்களுக்கு ரேபிஸ் நோயே இல்லாத ஒரு நாட்டில் செல்லப்பிராணியை தனிமையில் தங்கவைத்தால், அதன் பின் ஆஸ்திரேலியாவில் வளர்க்க முடியும்.

ஆனால் அதற்கு அதிகம் பணம் செலவழிக்க வேண்டும், அது மட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் 'ஸ்கையை' பிரிந்து இருக்க வேண்டும் என்பதும் ஜான், திவ்யா இருவருக்கும் தெரியவந்தது.

ஆனால் அவர்களும் வேறு வழியில்லாமல், செல்லப்பிராணியான 'ஸ்கையை ' துபாயில் ஆறு மாதம் தங்க வைக்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர். ஸ்கையை இருவரும் துபாய்க்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கு அலைந்து திரிந்து செல்லப்பிராணிகளை பராமரிக்கும் ஒரு இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

தங்களது செல்லப்பிராணியை எப்படி அவர்கள் கவனித்து கொள்வார்கள் என தெரிந்து கொள்வதற்காக, ஜான், திவ்யா இருவரும் தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டு ஒரு மாத காலம் அங்கேயே தங்கி வந்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் நாடு திரும்பியுள்ளனர்.

அந்த 5 மாத காலம் ஸ்கையை பிரிந்து இருவரும் தவித்து வந்துள்ளனர். அடிக்கடி வீடியோ கால் மூலம் ஸ்கையை பார்த்து வந்துள்ளனர். எப்போது அந்த 6 மாதம் முடியும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்போடு இருந்துள்ளனர். இறுதியில் அவர்கள் எதிராபார்த்த அந்த நாளும் வந்தது.

ஆறு மாத காலம் கடந்ததும் ஜான், திவ்யா இருவரும் தங்களது குழந்தை திரும்பி வந்தது போல மகிழ்ச்சின் எல்லைக்கே சென்றுள்ளனர். தற்போது அவர்கள் தாங்கள் நினைத்த ஆஸ்திரேலியாவில் ஸ்கையுடன் வசித்து வருகின்றனர்.

துபாயில் தங்கியதற்காக 15 லட்சம் ரூபாய் செலவானதாகவும், பலரும் கேட்டார்கள் நீங்கள் இவ்வளவு செலவு செய்வதற்கு ஆஸ்திரேலியாவில் வேறொரு நாயை வாங்கி வளர்த்திருக்கலாமே என்று ஆனால் அது பணம் சம்மந்தப்பட்டது அல்ல, அதையும் தாண்டியது என்பதை எப்படி அவர்களுக்கு புரிய வைக்க முடியும் என ஜான், திவ்யா இருவரும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நாய்க்காக இவ்வளவு தியாகமா? படம் பார்த்த மாதிரி இருக்கேப்பா..!
மனதை உருக்கிய தம்பதியின் கதை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies