BIG STORIES
இங்கேயும் வந்த அந்த சார்கள் ..! நந்தனம் கல்லூரி கேண்டீனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..! திமுக பிரமுகர் - மாஸ்டர் கைது
Jan 30, 2026 02:31 AM
15
இங்கேயும் வந்த அந்த சார்கள் ..! நந்தனம் கல்லூரி கேண்டீனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..! திமுக பிரமுகர் - மாஸ்டர் கைது
சென்னை நந்தனம் கல்லூரியில் உள்ள கேண்டீனில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கேண்டீன் நடந்திவந்த திமுக அபிமானி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வம், கடந்த 12 ஆண்டுகளாக, சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரியில், ஒப்பந்த முறையில் கேண்டீன் ஒன்றை நடத்தி வந்தார். அண்மையில் முத்துச்செல்வம் தனது கேண்டீனில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்த 22 வயது இளம் பெண்ணை பணிக்கு சேர்த்தார். கேண்டீனில் தங்கி அவர் வேலைப்பார்த்து வந்த நிலையில் சம்பவத்தன்று கேண்டீனில் இருந்து அந்த இளம் பெண் அலறல் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது அந்த பெண்ணிடம் கேண்டீனில் மாஸ்டராக உள்ள 57 வயதுடைய குணசேகர் என்பவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அச்சத்தால் அலறித்துடித்த அந்த இளம் பெண்ணை மீட்ட சைதாப்பேட்டை போலீசார் மன நல ஆலோசனை வழங்க ஏதுவாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர்.
அங்கு அந்த பெண் அளித்த தகவல்கள்அதிர்ச்சிக்குறியவையாக இருந்தது. 22 வயதான அந்த இளம்பெண் திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், அதன் பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் கும்பகோணத்தில் இருந்து மகேஷ் என்பவர் மூலம் முத்து செல்வத்தின் கேண்டீனில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
ஆதரவற்ற பெண் என்பதாலும் அந்த பெண் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதையும் தனக்கு சாதகமாக்கிய கேண்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம் அந்த பெண்ணை ஏமாற்றி கல்லூரி வளாகத்தில் ஆள் நடமாட்டம் இல்லா அறைகளுக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகின்றது. முத்துச் செல்வத்தின் நண்பர் கார்த்திகேயன் என்பவரும் அதே போல அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவர்களை தொடர்ந்து இந்த தகவல் மாஸ்டர் குணசேகரனுக்கு தெரியவந்த நிலையில், வேலைக்கு சேர்ந்த முதல் நாளே அவனும் வேலைக்கு இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும், அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் அவன் சிக்கிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த 3 பேர் மட்டுமல்லாமல் மேலும் இரு நபர்கள் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்த அந்த இளம் பெண் அவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை என்றும் பார்த்தால் அடையாளம் காட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணால் அடையாளம் காட்டப்பட்ட கேண்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயன், கேண்டீன் மாஸ்டர் குணசேகரன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் அந்த பெண்ணால் அடையாளம் காட்ட இயலாத இருவர் யார் ? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பட்டியல் கும்பகோணம் வரை நீளும் வாய்ப்புள்ளதாக கூறும் போலீசார் , அங்குள்ள சிலரும் அந்த இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு, மூவரும் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாகவும் விரைந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
கைதான 3 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 9 ஆவது மாஜிஸ்ட்டேரேட் முன்பாக ஆஜர் படுத்திய நிலையில் மூவரையும் வருகின்ற பிப்ரவரி 11 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் அழைத்து வரும் போது செய்தியாளர்கள் படம் எடுக்காதவாறு முகத்தை மூடியப்படி மறைத்து அழைத்து சென்றனர்.
கைதான கோட்டூர் புரம் முத்துசெல்வம் திமுக பிரமுகர் எனக்கூறப்படுகிறது. அண்ணாபல்கலைகழக சம்பவத்திற்கு பிறகு சென்னையில் நந்தனம் அரசு கல்லூரியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி வளாகம் மற்றும் கேண்டீன் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் இல்லை என்பதால் அந்த பெண் எங்கெல்லாம் அழைத்துச்செல்லப்பட்டாள் என்பதை போலீசாரால் கண்டறிய இயலவில்லை, வருங்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி காமிராக்களை அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu