BIG STORIES
கீரிப்பிள்ளை யாக மாறி பலியான 7 வயது சிறுவன்... விபரீதத்தின் பின்னணி என்ன ?
Jan 28, 2026 06:00 AM
33
கீரிப்பிள்ளை யாக மாறி பலியான 7 வயது சிறுவன்... விபரீதத்தின் பின்னணி என்ன ?
.திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடிக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாததால் , 7 வயது சிறுவன் ஒருவன் 3 மாதங்கள் கழித்து கீரிப்பிள்ளை போல் செய்கை செய்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் புதுத் தெருவை சேர்ந்த முத்து - தேவி தம்பதியினரின் மகன் நவீன் (7) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடைய வீட்டிற்குள் கோழிகள் வளர்த்து வரும் நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காட்டுக்குள் இருந்து வீட்டுக்குள் புகுந்த கீரிப்பிள்ளை ஒன்று சிறுவனின் கையை கடித்து இழுத்ததாக கூறப்படுகின்றது. வலிதாங்காமல் சிறுவன் அலறியதால் பெற்றோர் விழித்துக் கொண்டனர். அதற்குள்ளாக அந்த கீரிப்பிள்ளை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அந்த காயத்திற்கு அருகில் உள்ள மெடிக்கல் ஒன்றில் மாத்திரை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு திடீரென காய்ச்சல் அதிகமாகி உள்ளது. உடனடியாக பெற்றோர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் நவீனை சிகிச்சைக்காக அனுமதித்ததனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திங்கட்கிழமை நள்ளிரவு காய்ச்சல் அதிகமான நிலையில் சிறுவன் நவீன், திடீரென கீறிபிள்ளை போல் செய்கை செய்தபடியே பரிதாபமாக பலியானதாக சிறுவனின் தந்தை முத்து தெரிவித்தார்
இந்த தகவலை அறிந்து மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவர்கள் சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் , அந்தப்பகுதி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்க சிறுவனின் உடல் பாதுகாப்பாக நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் சிறுவன் வசித்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் நோய் பரவாமல் தடுப்பதற்காக குளோரின் பவுடர் வீசப்பட்டது.
கீரிப்பிள்ளை கடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காத தந்தையின் கவனக்குறைவே, ரேபிஸ் நோய் முற்றி சிறுவன் பலியாக காரணம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், 4 நாட்களாக அரசு மருத்துவர்கள் தொட்டால் தீட்டு என்று முறையான சிகிச்சை அளிக்காததால் தனது மகன் உயிரிழந்ததாக சிறுவனின் தந்தை முத்து குற்றஞ்சாட்டினார்
கீரிப்பிள்ளை கடித்த காயம் ஆறி இருந்தாலும் உரிய சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாலேயே மூன்று மாதம் கழித்து சிறுவன் கீரிப்பிள்ளை போல் செய்கை செய்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. நாய் கடிக்கு எப்படி ரேபிஸ் தடுப்பூசி போடுகிறோமோ , பூனை, குரங்கு , கீரிப்பிள்ளை கடித்தாலும் முறையான தொடர் சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது என்கின்றனர் மருத்துவர்கள்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu