முகப்பு
இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி
Nov 11, 2025 03:12 PM
60
இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வாயில் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
வழக்கறிஞர்கள் உள்பட 27 பேர் படுகாயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் அருகே இருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது.
தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் நீதிமன்றத்திற்குள் செல்ல முயன்றதாகவும், ஆனால் அவரால் செல்ல முடியாததால் காவல் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கார் வெடித்த சப்தம் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக தெரிவித்த அதிகாரிகள், தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu