RECENT NEWS

போதை ஸ்டாம்ப், காளான்களை விற்ற மருத்துவ மாணவர் கைது

போதை ஸ்டாம்ப், காளான்களை விற்ற மருத்துவ மாணவர் கைது

Nov 19, 2025

போதை ஸ்டாம்ப், காளான்களை விற்ற மருத்துவ மாணவர் கைது

போதை ஸ்டாம்ப், காளான்களை விற்ற மருத்துவ மாணவர் கைது

Nov 19, 2025

BIG STORIES

விடிஞ்சா கல்யாணம்.. குளியலறையில் சடலமான மணமகள்..! அதிர்ச்சியில் பெண் வீட்டார்

Oct 31, 2025 07:10 AM

426

விடிஞ்சா கல்யாணம்.. குளியலறையில் சடலமான மணமகள்..! அதிர்ச்சியில் பெண் வீட்டார்

விடிஞ்சா கல்யாணம்.. குளியலறையில் சடலமான மணமகள்..! அதிர்ச்சியில் பெண் வீட்டார்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு அருகே திருமணத்துக்கு முந்தைய நாள் குடும்பத்தினருடன் மணமகன் வீட்டிற்கு வந்த இடத்தில் குளியலறைக்கு சென்ற மணப்பெண் தலையில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் அத்தி மஞ்சேரி பேட்டை கிராமத்தில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ராமுவின் மகன் மணி . பட்டதாரியான மணி அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றார். மணிக்கும் ஆந்திர மாநிலம் நகரி அருகில் உள்ள சிந்தாலப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகள் சந்தியாவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

அக்டோபர் 31 வெள்ளிக்கிழமை ஆந்திர மாநிலம் பல்ஜி கண்டிகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான மண்டபத்தில் வைத்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் முந்தைய நாள் 30 ந்தேதி ஒன்றாக கோவிலுக்கு சென்று மணமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக , பெண் வீட்டார் அனைவரும் மணமகளுடன், மணமகன் மணி வீட்டிற்கு வந்து உள்ளனர். விடிந்தால் மறு நாள் திருமணம் என்ற நிலையில் மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்கு சந்தியா குளிக்க சென்றுள்ளார். குளியலறையில் இருந்து வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை என்பதால் குளியலறை கதவை உடைத்து பார்த்தபோது அவர் உள்ளே சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் மர்மமான முறையில் இறந்து போன சந்தியாவின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்காக திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளியலறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து திறந்ததாக பெண்ணின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

31 ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் வீட்டில், மணமகள் சந்தியா இறந்து போன சம்பவம் திருமண வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிணக்கூறாய்வில் சந்தியாவின் தலையில் காயம் காணப்பட்டதால், குளியலறையில் வழுக்கி விழுந்து சந்தியா இறந்திருக்காலாம் என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்ததால், பிணகூராய்விற்கு பின்னர் சந்தியாவின் சடலத்தை பெற்றுக் கொண்டு பெண் வீட்டார் ஆந்திராவுக்கு புறப்பட்டுச்சென்றனர்.

தங்கள் வீட்டுக்கு வந்த இடத்தில் வருங்கால மருமகள் உயிரிழந்ததோடு, திருமணமும் நின்று போனதால் மணமகன் வீட்டாரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies