மனைவி, 2 பெண் குழந்தைகளை கொன்ற விவசாயி
Jun 21, 2025
முகப்பு
என்ன வேகம்...என்ன வேகம்...டக்குன்னு ஊர் வந்துருச்சி..யோவ் இன்னும் கிளம்பலையா..! அரசு பேருந்து சரக்கு ஓட்டுநர்
Jun 16, 2025 02:05 PM
116
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி இரவு 8:20 மணிக்கு சிவகங்கை வழியாக மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு கிளம்பியது . ஆனால் மானாமதுரைக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தை சுற்றி வந்து மீண்டும் பேருந்து நிலையத்திலேயே நின்றது.
ஓட்டுநர் போதையில் இருப்பதால் இப்படி நடந்து விட்டதாக தெரியவந்ததை அடுத்து பதட்டமான பயணிகள் அனைவரும் அலறியடித்து கீழே இறங்கி நடத்துநரிடம் இது குறித்து கேட்டனர். உரிய பதில் கிடைக்கவில்லை.
உடனடியாக இது குறித்து பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் புகார் தெரிவித்த பொழுது அங்கிருந்த நேரக் காப்பாளர் போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் நடத்துனரை விட்டுவிட்டு பேருந்து ஓட்டுநர் மனோகரன் பேருந்தை மீண்டும் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே எடுத்து சென்று மதுரை சாலையில் நிறுத்திவிட்டார்.
இதனால் பதட்டம் அடைந்து திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பேருந்தை மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறுத்த சொல்லி பேருந்தை விட்டு மனோகரனை இறங்க கூறினர்.
மனோகரன் இறங்க மறுத்து தானே மானாமதுரைக்கு பேருந்து இயக்குவதாக கூறி அடம் பிடித்தார்.
இந்நிலையில் பேருந்து நடத்துனர் காவலர்கள் என அனைவரும் அவரிடம் கனிவாக கூறி பேருந்து விட்டு இறக்கினர்.
மனோகரன், நான் தான் பேருந்தை இயக்குவேன் எனக் கூறிக் கொண்டிருந்த நிலையில் போலீசார் அவரை மது அருந்தி உள்ளாரா? என்று கருவி கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தினர். அளவுக்கு மிஞ்சிய மதுபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து பேருந்து பணிமனைக்கு தகவல் தெரிவித்து மாற்று ஓட்டுனர் வரவழைக்கப்பட்டு மானாமதுரைக்கு பேருந்து இயக்கப்பட்டது.
இதில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக பேருந்து இயக்கப்பட்டது.
இந்த பேருந்து தான் கடைசி பேருந்து என்பதால் இதற்காக காத்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர் இந்த சம்பவத்தால் பேருந்து நிலையம் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
பேருந்து புறப்படுவதற்கு முன்பாக அதில் ஏறி உறங்கியவர்கள், இவ்வளவு சீக்கிரமா ஊருக்கு வந்து சேர்ந்து விட்டோமா என ஆச்சரியப்பட வைத்த இந்த சம்பவம் , சினிமா காமெடி காட்சி போல இருந்தாலும், ஓட்டுநர் மது போதையில் இருப்பது பேருந்து நிலையத்திலேயே தெரிய வந்ததால் அனைவரும் காப்பாற்றப்பட்டதாக பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்
அதே நேரத்தில் பேரூந்து வெளியே சென்று எங்கேனும் மோதி விபத்து நேர்ந்து இருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என புலம்பியவாறு பேருந்தில் ஏறி புறப்பட்டு சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu