முகப்பு
பள்ளி மாணவியை விரட்டிய ரோமியோ ஸ்பை ஆபீசர் கொலை..!
May 25, 2025 04:06 PM
487
காதலை பிரேக்கப் செய்த மாணவி... ஸ்பை ஆபிஸர் கொலை பகீர் பின்னணி..!
நாட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் எக்காலத்திலும் காதல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதனால்தான் தாய் தகப்பனுக்காக செய்யத் துணியாத காரியத்தை கூட காதலுக்காகவும், காதலிக்காகவும் செய்துவிட்டு போலீசில் சிக்கி சிலர் கம்பி என்னும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இதே போன்ற பயங்கர சம்பவம் ஒன்று சிவகங்கை மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன்.
டிராவல்ஸ் மற்றும் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற வள்ளியப்பனை அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுனன் என்ற இளைஞர் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த திருவேகம் பத்தூர் காவல் நிலைய போலீசார் வள்ளியப்பனின் சடலத்தை கைப்பற்றி பிணக்குறைவுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கொத்தனார் வேலை பார்த்து வந்த இளைஞர் அர்ஜுனனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் காதலுக்கு குறுக்கே நின்று காதலை பிரேக் அப் செய்ய வைத்ததால் உண்டான முன் விரோதத்தில் இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
40 வயதை கடந்த வள்ளியப்பனுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது டிராவல்ஸ் தொழிலில் நல்ல வருமானம் வந்த நிலையில் அவர் தனக்கு தெரிந்த சில பெண்களுக்கு பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.
அந்த வகையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பணம் கொடுத்துள்ளார் அந்த பெண்ணின் மகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அந்த மாணவியை அதே பகுதியில் வசித்து வரும் அர்ஜுனன் விரட்டி விரட்டி காதலித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் பேச்சுக்கு மயங்கி அந்த மாணவியும் காதல் வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது .
இதனை நேரில் பார்த்த வள்ளியப்பன் உடனடியாக தன்னை ஒரு ஸ்பை ஆபிஸராக நினைத்துக் கொண்டு அந்த மாணவியின் தாயிடம் காதல் விவகாரத்தை போட்டுக் கொடுத்துள்ளார்.
இருவரும் பழகும் விதத்தை எடுத்துச் சொல்லி மாணவியை வீட்டில் மாட்டிவிட்டுள்ளார்.
அர்ஜுனன் கெட்டவன் என்றும் அவன் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகாவும் கூறி அர்ஜுனனை வெறுத்து மாணவியையே காதலை முறிக்க வைத்துள்ளார்.
பலமுறை பேச முயன்ற நிலையில் அந்த மாணவி அர்ஜுனனை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது காதலுக்கு வேட்டு வைத்த வள்ளியப்பன் மீது அர்ஜுனன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையே அர்ஜுனன் குறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் தாய் வாய்மொழியாக திருவேகம் பத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காதலை முறித்த ஆத்திரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு தன் மீது போலீசிலும் புகார் அளித்ததால் அதற்கு காரணமான வள்ளியப்பனை தீர்த்து கட்ட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டுள்ளது அதன்படி சம்பவத்தன்று வள்ளியப்பனை கொடூரமாக கொலை செய்ததாக அர்ஜுனன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அர்ஜுனனை கைது செய்துள்ள போலீசார் முழுக்க முழுக்க இது வள்ளியப்பனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான முன் விரோதம் காரணமாக நிகழ்த்தப்பட்ட கொலை என்று தெரிவித்தனர்.
மேலும் அர்ஜுனன் குறித்து தங்களிடம் எந்த ஒரு எழுத்துப்பூர்வமான புகாரூம் வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
படிக்கின்ற வயதில் படிப்பை மறந்து காதலில் விழுந்தால் வாழ்க்கை சீரழிந்து விடும் , இதனை அறிந்த மாணவி தனது தவறை உணர்ந்து பிரேக் அப் செய்த நிலையில் அதற்கு காரணம் வள்ளியப்பன் என்ற ஆத்திரத்தில் அவர் மீது தீராத வெறி கொண்டு இந்த கொலை சம்பவத்தை அர்ஜுனன் நிகழ்த்தியதாக சுட்டிக்காட்டும் போலீசார் கூடுமானவரை இது போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர் குறித்து முன்கூட்டியே காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வரும் காலங்களில் இது போன்று அசம்பாவிதங்கள் நிகழாமல் முன்னெச்சரிக்கையுடன் தடுக்கவும் வசதியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu