RECENT NEWS

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

தேர்தல் செலவுக்கு திமுக பணம் கொடுத்தது உண்மை - மார்க். கம்யூ சண்முகம்

Jul 19, 2025

BIG STORIES

சிறுமி பலி யார் பொறுப்பு ? காவல் ஆய்வாளர் சஸ்பெண்டு சாலைப் பள்ளம் சீராக்கப்படுமா ? கவனமாக வாகனம் ஓட்டுங்கள்

Jun 19, 2025 01:06 AM

132

சிறுமி பலி யார் பொறுப்பு ? காவல் ஆய்வாளர் சஸ்பெண்டு
சாலைப் பள்ளம் சீராக்கப்படுமா ? கவனமாக வாகனம் ஓட்டுங்கள்

சிறுமி பலி யார் பொறுப்பு ? காவல் ஆய்வாளர் சஸ்பெண்டு சாலைப் பள்ளம் சீராக்கப்படுமா ?

சென்னை கொளத்தூர் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுமி சாலை பள்ளத்தால் தவறிவிழுந்த நிலையில் தண்ணீர் லாரியில் சிக்கி நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு சாய்ராம் சாலை மூன்றாவது தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன் இவரது மனைவி யாமினி. இவர்களுக்கு அரவிந்த் என்ற மகனும் 10 வயதில் சவுமியா என்ற மகளும் உள்ளனர். கணவர் செந்தில்நாதன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வரும் யாமினி தான், தனது இரு குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் தனது மகள் சவுமியாவை பள்ளியில் விடுவதற்காக யாமினி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றார். காலை 8 15 மணியளவில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு - வாக்கின்ஸ் தெரு சந்திப்பு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில் வண்டி சிக்கி நிலை தடுமாறி யாமினியும் சிறுமி சவுமியாவும் கீழே விழுந்தனர்.

யாமினி சாலையின் இடதுபுறமாக கீழே விழுந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த சிறுமி சவுமியா வலது புறமாக சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியில் பின் சக்கரம் சிறுமி சவுமியா மீது ஏறி இறங்கியது . இதில் சவுமியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

கீழே விழுந்த யாமினி சுதாரித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது தனது மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதை பார்த்து துடிதுடித்து போனார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துசிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. தன் கண்ணெதிரே தனது மகள் பலியானதை நினைத்து தாயும் உறவினர்களும் கதறி அழுதனர்.

இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு வரவேண்டிய தண்ணீர் லாரியை பள்ளி நேரத்தில் அதுவும் பீக் ஹவர்ஸ் என்று அழைக்கப்படும் நேரத்தில் நகருக்குள் நுழைய தடுக்க தவறியதால் இந்த விபத்து நேர்ந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர் சத்யமூர்த்தி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பீக் ஹவர்ஸ் நேரங்களில் கனரக வாகனங்கள், தண்ணீர் லாரிகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தாமல் அலட்சியமாக இருந்ததாலும், பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாகவும் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் இது ஒரு பாடம் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

மேலும் விபத்துக்களை தவிர்க்கவும், வாகனங்களை மெதுவாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதன் அவசியம் குறித்து விளக்கிய போக்குவரத்து காவல் துறையினர் தண்ணீர் டேங்கர் லாரி இயக்க அனுமதிக்கப்பட்ட நேரம் குறித்த விவரங்களை விளக்கி சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் சாலையில் கிடந்த பள்ளத்தால் அவர் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பாக விசாரணை நடந்து வருகின்றது. அதே நேரத்தில் தங்கள் வீட்டு பிள்ளைகளை பள்ளிகளுக்கு அழைத்துச்செல்லும் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடனும் , எச்சரிக்கையுடனும் இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும்  “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies